மும்பை: 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வருகிற நவம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் துபாயில் நடந்தது. அதே போல இந்தாண்டிற்கான ஐபிஎல் ஏலமும் வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளது. துபாய், அபுதாபி, தோஹா அல்லது சவுதி அரேபியாவில் 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் கிரிக்கெட் மீதான முதலீடுகள் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக, 2025ம் ஆண்டிற்கான மெகா ஏலத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஏலம் பெரும்பாலும் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்தப்படலாம். கடந்த ஜூலை மாத இறுதியில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கூட்டத்தை பிசிசிஐ நடத்தியது. அந்த கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலிருந்து ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகத் தான் ஐபிஎல் ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.
பல்வேறு அணிகள் தரப்பில் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முடிவுகள் எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். மேலும், ரிடென்ஷன் விதிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட பிசிசிஐ தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}