ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

Sep 19, 2024,03:55 PM IST

மும்பை: 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வருகிற நவம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் துபாயில் நடந்தது. அதே போல இந்தாண்டிற்கான ஐபிஎல் ஏலமும் வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளது. துபாய், அபுதாபி, தோஹா அல்லது சவுதி அரேபியாவில் 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 




குறிப்பாக சவுதி அரேபியாவில் கிரிக்கெட் மீதான முதலீடுகள் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக,  2025ம் ஆண்டிற்கான மெகா ஏலத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.


ஏலம் பெரும்பாலும் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்தப்படலாம். கடந்த ஜூலை மாத இறுதியில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கூட்டத்தை பிசிசிஐ நடத்தியது. அந்த கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலிருந்து ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகத் தான் ஐபிஎல் ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.


பல்வேறு அணிகள் தரப்பில் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முடிவுகள் எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். மேலும், ரிடென்ஷன் விதிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட பிசிசிஐ  தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்