டெல்லி: 2008ம் ஆண்டு யு 19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது அந்த அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் விராட் கோலி. அப்போது அதே அணியில் இடம் பெற்றிருந்த இன்னொரு இளம் வீரர்தான் தன்மய் ஸ்ரீவாஸ்தவா. மேட்டர் என்னன்னா.. இப்போது தன்மய் ஸ்ரீவாஸ்தவா ஐபிஎல் போட்டியில் நடுவராக அறிமுகமாகிறார்.
மலேசியாவில் 2008ம் ஆண்டு நடந்த யு19 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற அந்தத் தொடர் மூலமாகத்தான் விராட் கோலி பிரபலமானார். ஒரு நட்சத்திரமாக அதில் அவர் ஜொலித்திருந்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று இந்திய அணியில் முக்கிய ஸ்டாராக இருக்கிறார் கோலி. இடையில் கேப்டனாகவும் கலக்கியிருந்தார்.
அந்தத் தொடர் கோலிக்கு உயர்வு கொடுத்தாலும் கூட அவருடன் டீமில் இடம் பெற்ற தன்மய் ஸ்ரீவாஸ்தவாவுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் 46 ரன்களைக் குவித்திருந்தார் ஸ்ரீவாஸ்தவா. அதன் பிறகு அவர் பல போட்டிகளில் ஆடினாலும் கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் நடுவராக அறிமுகமாகிறார் ஸ்ரீவாஸ்தவா.
ஸ்ரீவாஸ்தவா குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள எக்ஸ் தள செய்தியில், சிறந்த வீரராக களத்தில் இருந்து வந்த ஸ்ரீவாஸ்தவா தற்போது நடுவராக புதிய அவதாரம் காண்கிறார். அவருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது.
இடது கை பேட்ஸ்மேன் ஆன ஸ்ரீவாஸ்தவா யு 19 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 262 ரன்களை எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 52.40 ஆக இருந்தது. மொத்தம் 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4918 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ரீவாஸ்தவா.
வீரர்கள் நடுவர்களாக மாறுவது இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிதல்ல. முன்பு சுழற்பந்துவீச்சாளர் எஸ்.வெங்கட்ராகவன் அம்பயராக பணியாற்றி அசத்தியிருந்தார். பின்னர் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் நடுவராக அசத்தலாக பணியாற்றியிருந்தார். இந்த வரிசையில் ஸ்ரீவாஸ்தவா அசத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
{{comments.comment}}