டெல்லி: 2008ம் ஆண்டு யு 19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது அந்த அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் விராட் கோலி. அப்போது அதே அணியில் இடம் பெற்றிருந்த இன்னொரு இளம் வீரர்தான் தன்மய் ஸ்ரீவாஸ்தவா. மேட்டர் என்னன்னா.. இப்போது தன்மய் ஸ்ரீவாஸ்தவா ஐபிஎல் போட்டியில் நடுவராக அறிமுகமாகிறார்.
மலேசியாவில் 2008ம் ஆண்டு நடந்த யு19 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற அந்தத் தொடர் மூலமாகத்தான் விராட் கோலி பிரபலமானார். ஒரு நட்சத்திரமாக அதில் அவர் ஜொலித்திருந்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று இந்திய அணியில் முக்கிய ஸ்டாராக இருக்கிறார் கோலி. இடையில் கேப்டனாகவும் கலக்கியிருந்தார்.
அந்தத் தொடர் கோலிக்கு உயர்வு கொடுத்தாலும் கூட அவருடன் டீமில் இடம் பெற்ற தன்மய் ஸ்ரீவாஸ்தவாவுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் 46 ரன்களைக் குவித்திருந்தார் ஸ்ரீவாஸ்தவா. அதன் பிறகு அவர் பல போட்டிகளில் ஆடினாலும் கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் நடுவராக அறிமுகமாகிறார் ஸ்ரீவாஸ்தவா.
ஸ்ரீவாஸ்தவா குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள எக்ஸ் தள செய்தியில், சிறந்த வீரராக களத்தில் இருந்து வந்த ஸ்ரீவாஸ்தவா தற்போது நடுவராக புதிய அவதாரம் காண்கிறார். அவருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது.
இடது கை பேட்ஸ்மேன் ஆன ஸ்ரீவாஸ்தவா யு 19 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 262 ரன்களை எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 52.40 ஆக இருந்தது. மொத்தம் 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4918 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ரீவாஸ்தவா.
வீரர்கள் நடுவர்களாக மாறுவது இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிதல்ல. முன்பு சுழற்பந்துவீச்சாளர் எஸ்.வெங்கட்ராகவன் அம்பயராக பணியாற்றி அசத்தியிருந்தார். பின்னர் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் நடுவராக அசத்தலாக பணியாற்றியிருந்தார். இந்த வரிசையில் ஸ்ரீவாஸ்தவா அசத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}