நண்பா நீ விளையாடு.. நான் அம்பயரிங் பண்றேன்.. IPL Umpire ஆன விராட் கோலியின் டீம் மேட்!

Mar 19, 2025,06:31 PM IST

டெல்லி:  2008ம் ஆண்டு யு 19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது அந்த அணியில் முக்கிய வீரராக விளங்கியவர் விராட் கோலி. அப்போது அதே அணியில் இடம் பெற்றிருந்த இன்னொரு இளம் வீரர்தான் தன்மய் ஸ்ரீவாஸ்தவா. மேட்டர் என்னன்னா.. இப்போது தன்மய் ஸ்ரீவாஸ்தவா ஐபிஎல் போட்டியில் நடுவராக அறிமுகமாகிறார்.


மலேசியாவில் 2008ம் ஆண்டு நடந்த யு19 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா வெற்றி பெற்ற அந்தத் தொடர் மூலமாகத்தான் விராட் கோலி பிரபலமானார். ஒரு நட்சத்திரமாக அதில் அவர் ஜொலித்திருந்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று இந்திய அணியில் முக்கிய ஸ்டாராக இருக்கிறார் கோலி. இடையில் கேப்டனாகவும் கலக்கியிருந்தார். 




அந்தத் தொடர் கோலிக்கு உயர்வு கொடுத்தாலும் கூட அவருடன் டீமில் இடம் பெற்ற தன்மய் ஸ்ரீவாஸ்தவாவுக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை. அந்த உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் 46 ரன்களைக் குவித்திருந்தார் ஸ்ரீவாஸ்தவா. அதன் பிறகு அவர் பல போட்டிகளில் ஆடினாலும் கூட இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் நடுவராக அறிமுகமாகிறார் ஸ்ரீவாஸ்தவா. 


ஸ்ரீவாஸ்தவா குறித்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள எக்ஸ் தள செய்தியில், சிறந்த வீரராக களத்தில் இருந்து வந்த ஸ்ரீவாஸ்தவா தற்போது நடுவராக புதிய அவதாரம் காண்கிறார். அவருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளது.


இடது கை பேட்ஸ்மேன் ஆன ஸ்ரீவாஸ்தவா யு 19 உலகக் கோப்பைத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 262 ரன்களை எடுத்திருந்தார்.  அவரது பேட்டிங்  சராசரி 52.40 ஆக இருந்தது. மொத்தம் 90 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 4918 ரன்களை எடுத்துள்ளார் ஸ்ரீவாஸ்தவா.


வீரர்கள் நடுவர்களாக மாறுவது இந்திய கிரிக்கெட்டுக்குப் புதிதல்ல. முன்பு சுழற்பந்துவீச்சாளர் எஸ்.வெங்கட்ராகவன் அம்பயராக பணியாற்றி அசத்தியிருந்தார். பின்னர் வேகப் பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் நடுவராக அசத்தலாக பணியாற்றியிருந்தார். இந்த வரிசையில் ஸ்ரீவாஸ்தவா அசத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!

news

தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை

news

வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்

news

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து

news

நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்

news

துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்