நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.. ஆர்வத்தில் ரசிகர்கள்..!

May 17, 2025,12:01 PM IST

பெங்களூரு: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. இதையடுத்து ரசிகர்களிடையே மீண்டும் ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது.


கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை  மேற்கொண்டதால்  தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டதால் போர்ப் பதட்டம் தணிந்தது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, இன்று தொடங்கும் ஐபிஎல் 2025 லீக் போட்டிகள் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  பிளே ஆப் சுற்று 29, 30, மற்றும் ஜூன் 1 தேதிகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இறுதிப் போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.




பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியில், பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏற்கனவே பெங்களூர் அணி 8 போட்டியில்  வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நினைவிருக்கலாம்‌.


திருத்தியமைக்கப்பட்ட அட்டவணைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் போட்டிகள் ஏதும் இடம் பெறாது. இந்த இரு அணிகளும் தகுதியிழந்து விட்டதால் போட்டிகளையும் மற்ற ஊர்களுக்குக் கொண்டு போய் விட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

news

Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?

news

தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!

news

விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை

news

தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!

news

தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்