பெங்களூரு: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன. இதையடுத்து ரசிகர்களிடையே மீண்டும் ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதால் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நீடித்தது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி விட்டதால் போர்ப் பதட்டம் தணிந்தது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணையை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, இன்று தொடங்கும் ஐபிஎல் 2025 லீக் போட்டிகள் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று 29, 30, மற்றும் ஜூன் 1 தேதிகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இறுதிப் போட்டி ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கும் ஐபிஎல் போட்டியில், பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை காண ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏற்கனவே பெங்களூர் அணி 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.
திருத்தியமைக்கப்பட்ட அட்டவணைப்படி சென்னை மற்றும் ஹைதராபாத்தில் போட்டிகள் ஏதும் இடம் பெறாது. இந்த இரு அணிகளும் தகுதியிழந்து விட்டதால் போட்டிகளையும் மற்ற ஊர்களுக்குக் கொண்டு போய் விட்டனர்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}