துபாய்: 2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் வேற லெவலில் இருக்கிறது. யாரும் எதிர்பாராத பெரிய பெரிய விலைக்கு இன்று பல வீரர்கள் ஏலம் போயுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகைக்கு நடந்த ஏலமாக இது பார்க்கப்படுகிறது.
இன்றைய ஏலத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே ஆஸ்திரேலியாதான். இந்த நாட்டின் வீரர்கள்தான் மிகப் பெரிய தொகைக்கு இன்று ஏலம் போயுள்ளனர். அதாவது டாப் 2 அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் ஆஸ்திரேலியர்கள்தான்.
மிட்சல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். பாட் கமின்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ. 20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நியூசிலாந்தைச் சேர்ந்த டெரில் மிட்சல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்திய வீரர்களைப் பொறுத்தவரை இன்று அதிக விலைக்கு ஏலம் போனவர் ஹர்ஷல் படேல்தான். இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதேபோல பந்து வீச்சாளர் அல்ஸரி ஜோசப் ரூ. 11.50 கோடிக்கு ஏலம் போனார். ராஜஸ்தான் அணியில் ரோமன் பாவல் ரூ. 7.40 கோடிக்கு ஏலம் போனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரூ. 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இன்றைய ஏலத்தில் 2 வீரர்கள் 20 கோடிக்கு மேல் ஏலம் போயுள்ளனர். இதுவரை ஐபிஎல் ஏலத்தில் இப்படி நடந்ததில்லை. அந்த வகையில் இந்த வருட ஏலம் வரலாறு படைத்து விட்டது. மேலும் அதிக விலை கொடுத்து வீரர்களை ஏலம் எடுப்பதில் சன்ரைசர்ஸ் அணியும், கொல்கத்தாவும் தீவிரம் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
Short Story: ஊன்றுகோல்!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஓடும் நதி ஓசையிலே.. தோடி ராகம் கேட்குதே!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
குழந்தை
புதுவருட டைரி!
{{comments.comment}}