துபாய்: துபாயில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் கோலாகலமாக தொடங்கியது. முதல் வீரராக ரோமன் பாவல் விலைக்குப் போனார். 1 கோடிக்கு அடிப்படை விலை வைக்கப்பட்ட அவர் ரூ. 7.40 கோடிக்கு விலை போனார். முதல் வீரரே பரபரப்பான முறையில் ஏலம் போனதால் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது வீரர்கள் ஏலம்
2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் தொடங்கியது. 333 வீரர்கள் இந்த ஏலத்தில் விடப்படுகின்றனர். ஐபிஎல் அணிகள் பத்தும் முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆவலுடன் களம் குதித்துள்ளன. முதல் முறையாக இந்த ஏலத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரோமன் பாவல் விடப்பட்டார். அடிப்படை விலையாக இவருக்கு ரூ. 1 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

அடுத்தடுத்து விலை ஏறிக் கொண்டே போக கடைசியில் ரூ. 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஏலம் போனார் ரோமன் பாவல்.
அதிரடியான ஆல்ரவுண்டர் பாவல். ஜமைக்காவைச் சேர்ந்த இவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். அதிரடியான பேட்ஸ்மேனான பாவல், 2015ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். முதல் போட்டியிலேயே மேன் ஆதி மேட்ச் வாங்கியவர் இவர். பேட்ஸ்மேனாக மட்டுமலம்லாமல் மீடியம் பேஸராகவும் பந்து வீச்சிலும் கலக்கக் கூடியவர் பாவல்.
தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டி20 அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாவல்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}