துபாய்: துபாயில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் கோலாகலமாக தொடங்கியது. முதல் வீரராக ரோமன் பாவல் விலைக்குப் போனார். 1 கோடிக்கு அடிப்படை விலை வைக்கப்பட்ட அவர் ரூ. 7.40 கோடிக்கு விலை போனார். முதல் வீரரே பரபரப்பான முறையில் ஏலம் போனதால் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது வீரர்கள் ஏலம்
2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் தொடங்கியது. 333 வீரர்கள் இந்த ஏலத்தில் விடப்படுகின்றனர். ஐபிஎல் அணிகள் பத்தும் முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆவலுடன் களம் குதித்துள்ளன. முதல் முறையாக இந்த ஏலத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரோமன் பாவல் விடப்பட்டார். அடிப்படை விலையாக இவருக்கு ரூ. 1 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

அடுத்தடுத்து விலை ஏறிக் கொண்டே போக கடைசியில் ரூ. 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஏலம் போனார் ரோமன் பாவல்.
அதிரடியான ஆல்ரவுண்டர் பாவல். ஜமைக்காவைச் சேர்ந்த இவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். அதிரடியான பேட்ஸ்மேனான பாவல், 2015ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். முதல் போட்டியிலேயே மேன் ஆதி மேட்ச் வாங்கியவர் இவர். பேட்ஸ்மேனாக மட்டுமலம்லாமல் மீடியம் பேஸராகவும் பந்து வீச்சிலும் கலக்கக் கூடியவர் பாவல்.
தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டி20 அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாவல்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}