துபாய்: துபாயில் ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் கோலாகலமாக தொடங்கியது. முதல் வீரராக ரோமன் பாவல் விலைக்குப் போனார். 1 கோடிக்கு அடிப்படை விலை வைக்கப்பட்ட அவர் ரூ. 7.40 கோடிக்கு விலை போனார். முதல் வீரரே பரபரப்பான முறையில் ஏலம் போனதால் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது வீரர்கள் ஏலம்
2024 ஐபிஎல் வீரர்கள் ஏலம் துபாயில் இன்று பிற்பகல் தொடங்கியது. 333 வீரர்கள் இந்த ஏலத்தில் விடப்படுகின்றனர். ஐபிஎல் அணிகள் பத்தும் முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆவலுடன் களம் குதித்துள்ளன. முதல் முறையாக இந்த ஏலத்தை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஏலத்தில் முதல் வீரராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ரோமன் பாவல் விடப்பட்டார். அடிப்படை விலையாக இவருக்கு ரூ. 1 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

அடுத்தடுத்து விலை ஏறிக் கொண்டே போக கடைசியில் ரூ. 7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஏலம் போனார் ரோமன் பாவல்.
அதிரடியான ஆல்ரவுண்டர் பாவல். ஜமைக்காவைச் சேர்ந்த இவர் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிரடியாக ஆடி வருகிறார். அதிரடியான பேட்ஸ்மேனான பாவல், 2015ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். முதல் போட்டியிலேயே மேன் ஆதி மேட்ச் வாங்கியவர் இவர். பேட்ஸ்மேனாக மட்டுமலம்லாமல் மீடியம் பேஸராகவும் பந்து வீச்சிலும் கலக்கக் கூடியவர் பாவல்.
தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் டி20 அணி கேப்டனாக செயல்பட்டு வருகிறார் பாவல்.
பிஞ்சு உள்ளத்தில் நஞ்சு முள்
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
{{comments.comment}}