சென்னை: சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 17வது ஐபிஎல் திருவிழா இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளுக்கு அன்று முதல் இன்று வரை ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இப்போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால், ஒரு ஆட்டம் மாலை 3.30க்கும், மற்றொரு ஆட்டம் இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட விதிமுறைகள் நடப்பு ஆண்டிலும் தொடர்கிறது.
இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவதால் சென்னையில் 2500 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}