சென்னை: சென்னையில் இன்று வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய பிரிமீயர் லீக் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டி 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 17வது ஐபிஎல் திருவிழா இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்கி மே 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளுக்கு அன்று முதல் இன்று வரை ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இப்போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க உள்ளது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக சில புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பவுலர்கள் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர் வீச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பவுலர்களுக்கு கூடுதல் உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கும் விழா மாலை 6:30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம். இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசை வெள்ளத்தில் மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா காரணமாக இன்று மட்டும் இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கும், ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெற்றால், ஒரு ஆட்டம் மாலை 3.30க்கும், மற்றொரு ஆட்டம் இரவு 7.30க்கும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு புகுத்தப்பட்ட விதிமுறைகள் நடப்பு ஆண்டிலும் தொடர்கிறது.
இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேஞ்சர்ஸ்சும் மோதுகின்றன. ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா மற்றும் முதல் போட்டி இன்று சென்னையில் நடைபெறுவதால் சென்னையில் 2500 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}