வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் தனது படைகளை அமெரிக்கா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மிகப் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரானுக்கு வந்திருந்த இடத்தில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் உளவுப்படைதான் இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதியையும் இஸ்ரேலியப் படையினர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் கொன்று விட்டனர். இந்த சம்பவங்களால் ஈரான் கடும் கொதிப்படைந்துள்ளது. ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகத்தான் ஹனியே டெஹ்ரான் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது.

இதனால் இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஈரான் ஆயத்தமாகி வருகிறது. ஈரானிலிருந்து மட்டுமல்லாமல் ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பல முனைத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதையடுத்து அமெரிக்கா தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இஸ்ரேலைக் காப்பதற்காக முதலில் வரும் நாடு அமெரிக்காதான். இஸ்ரேல் தும்மினால் கூட உடனே ஓடி வந்து வேலை செய்ய ஆரம்பித்து விடும் அமெரிக்கா. அந்த வகையில் தற்போது ஈரான் திட்டமிட்டு வரும் தாக்குதலால் இஸ்ரேலுக்கு பாதிப்பு வந்து விடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் தனது படை பலத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கூடுதல் போர்க் கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும் போர் விமானங்களின் எண்ணிக்கையையும் அது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவே படையினரை அதிகரிப்பதாக அமெரிக்கா கூறினாலும் கூட இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தால் அதை முறியடிக்கவே அமெரிக்கா தனது படையை குவிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க் கப்பலுக்குப் பதில் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பலை அங்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. மேலும் ஏவுகணைகளையும் அதிக அளவில் அமெரிககா அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல அதி நவீன போர் விமானங்களையும் அனுப்பி வைத்து வருகிறது.
ஈரான் கோபம், இஸ்ரேல் படுகொலைகள், அமெரிக்காவின் படைக் குவிப்பு எல்லாம் சேர்ந்து மத்திய கிழக்கை மேலும் சூடாக்கியுள்ளன. இந்தப் போர் மூண்டால் அது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}