இஸ்ரேலின் போர்க்குற்றங்களை நிறுத்த வேண்டும்.. ஈரான், சவூதி அரேபியா ஆலோசனை

Oct 12, 2023,02:42 PM IST

ரியாத்: பாலஸ்தீனத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போர்க்குற்றத்தை நிறுத்த வேண்டும் என்று  ஈரான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இந்த இரு நாடுகளையும் சமீபத்தில்தான் சீனா மத்தியஸ்தம் செய்து சமரசம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.




ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் பாலஸ்தீனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.  அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.


சவூதி இளவரசர் சல்மான் கூறுகையில், தற்போது பாலஸ்தீனத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை நிறுத்த அனைத்து சர்வதேசத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். இதை நிறுத்தியாக வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்காது என்றார்.


ஈரான் அரசு ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய தாக்குதல் மிகப் பெரிதாக இருப்பதாலும் அமெரிக்காவும் களத்தில் குதித்திருப்பதாலும், ஹமாஸுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பதில் முஸ்லீம் நாடுகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், இஸ்ரேலை இப்படியே விட்டால், மொத்த பாலஸ்தீனத்தையும் மீண்டும் ஆக்கிரமித்து விடும் என்ற அச்சமும் முஸ்லீம் நாடுகளிடம் உள்ளது. அதையும் முறியடிக்க அவை உறுதியாக உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்