ரியாத்: பாலஸ்தீனத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போர்க்குற்றத்தை நிறுத்த வேண்டும் என்று ஈரான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இந்த இரு நாடுகளையும் சமீபத்தில்தான் சீனா மத்தியஸ்தம் செய்து சமரசம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் பாலஸ்தீனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சவூதி இளவரசர் சல்மான் கூறுகையில், தற்போது பாலஸ்தீனத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை நிறுத்த அனைத்து சர்வதேசத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். இதை நிறுத்தியாக வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்காது என்றார்.
ஈரான் அரசு ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய தாக்குதல் மிகப் பெரிதாக இருப்பதாலும் அமெரிக்காவும் களத்தில் குதித்திருப்பதாலும், ஹமாஸுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பதில் முஸ்லீம் நாடுகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், இஸ்ரேலை இப்படியே விட்டால், மொத்த பாலஸ்தீனத்தையும் மீண்டும் ஆக்கிரமித்து விடும் என்ற அச்சமும் முஸ்லீம் நாடுகளிடம் உள்ளது. அதையும் முறியடிக்க அவை உறுதியாக உள்ளன.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}