ரியாத்: பாலஸ்தீனத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போர்க்குற்றத்தை நிறுத்த வேண்டும் என்று ஈரான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இந்த இரு நாடுகளையும் சமீபத்தில்தான் சீனா மத்தியஸ்தம் செய்து சமரசம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் பாலஸ்தீனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சவூதி இளவரசர் சல்மான் கூறுகையில், தற்போது பாலஸ்தீனத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை நிறுத்த அனைத்து சர்வதேசத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். இதை நிறுத்தியாக வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்காது என்றார்.
ஈரான் அரசு ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய தாக்குதல் மிகப் பெரிதாக இருப்பதாலும் அமெரிக்காவும் களத்தில் குதித்திருப்பதாலும், ஹமாஸுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பதில் முஸ்லீம் நாடுகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், இஸ்ரேலை இப்படியே விட்டால், மொத்த பாலஸ்தீனத்தையும் மீண்டும் ஆக்கிரமித்து விடும் என்ற அச்சமும் முஸ்லீம் நாடுகளிடம் உள்ளது. அதையும் முறியடிக்க அவை உறுதியாக உள்ளன.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}