ரியாத்: பாலஸ்தீனத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போர்க்குற்றத்தை நிறுத்த வேண்டும் என்று ஈரான் மற்றும் சவூதி அரேபிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஈரானுக்கும், சவூதி அரேபியாவுக்கும் எப்போதும் ஒத்துப் போகாது. இந்த இரு நாடுகளையும் சமீபத்தில்தான் சீனா மத்தியஸ்தம் செய்து சமரசம் ஏற்படுத்தியது. அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் முதல் முறையாக முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் பாலஸ்தீனம் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
சவூதி இளவரசர் சல்மான் கூறுகையில், தற்போது பாலஸ்தீனத்திற்கு எதிராக நடந்து வரும் தாக்குதலை நிறுத்த அனைத்து சர்வதேசத் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். இதை நிறுத்தியாக வேண்டும். அப்பாவி மக்களை குறி வைத்துத் தாக்குதல் நடத்துவதை சவூதி அரேபியா ஒருபோதும் ஏற்காது என்றார்.
ஈரான் அரசு ஆரம்பத்திலிருந்தே பாலஸ்தீனத்திற்கும், ஹமாஸுக்கும் ஆதரவாகவே இருக்கிறது. ஆனால் தற்போதைய தாக்குதல் மிகப் பெரிதாக இருப்பதாலும் அமெரிக்காவும் களத்தில் குதித்திருப்பதாலும், ஹமாஸுக்கு ஆதரவாக எப்படி செயல்படுவது என்பதில் முஸ்லீம் நாடுகளுக்கிடையே குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், இஸ்ரேலை இப்படியே விட்டால், மொத்த பாலஸ்தீனத்தையும் மீண்டும் ஆக்கிரமித்து விடும் என்ற அச்சமும் முஸ்லீம் நாடுகளிடம் உள்ளது. அதையும் முறியடிக்க அவை உறுதியாக உள்ளன.
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
{{comments.comment}}