டெஹரான்: வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோர் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஈரான் அரசு நீக்கியுள்ளது. இதனால் இன்டர்நெட் தொடர்பான பிற தடைகளும் நீக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தத் தடை நீக்கம் தொடர்பாக உயர் மட்ட அரசு அதிகாரிகளுடன், அரசு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோர் தடை நீக்க அறிவிப்பு வெளியானது. ஈரானில் ஏற்கனவே இன்டர்நெட் சேவைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து ஈரான் நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சத்தார் ஹஷேமி கூறுகையில், இன்டர்நெட் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான முதல் கட்ட நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக அதிபர், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மாற்றங்கள் தொடரும் என்றார் அவர்.
தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது இன்டர்நெட் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள மசூத் பெசஸ்கியான் உறுதி அளித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அதை அவர் நிறைவேற்றத் தொடங்கியுள்ளார்.
அதேசமயம் வெளிநாட்டு நிறுவனங்களான வாட்ஸ் ஆப், கூகுள் பிளேஸ்டோருக்குப் பதில் அதற்கு சமமான உள்ளூர் தொழில்நுட்பங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}