"அந்த நிலாவைத்தான்"... சந்திரயான் 3.. நேரலையில் கண்டுகளிக்க தயாராகும் இந்தியர்கள்!

Aug 22, 2023,04:23 PM IST

பெங்களூரு: நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலம் நாளை நிலவில் தரையிறங்கப் போகும் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.


இதை நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகள், செய்தி இணையதளங்கள் ஆகியவற்றிலும் கூட இதை நேரடியாக கண்டு ரசிக்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். 


சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஜூலை 14 உள்ளூர் நேரம் பிற்பகல் 2 .35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்து. அதன் பிறகு அதிலிருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.


விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க இன்னும் 25 கிலோ மீட்டர் தொலைவு தான் உள்ளது. நாளை தரையிறங்கும் நிகழ்வை, இஸ்ரோ தனது இணையதளம் மூலம் நேரலையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவுள்ளது இதை அனைத்து கல்வி நிலையங்களும் ஒளிபரப்பும்.


நிலவின் தென் துருவப் பகுதி என்பது அதிகம் சூரிய ஒளிபடாத திசையாகும். பூமியின் பார்வைக்கு அந்தப் பக்கம் இருப்பதாகும். இந்தப் பகுதியில் இதுவரை யாரும் இறங்கியதில்லை. உலக நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியா தான் சந்திராயன்-3 விண்கலத்தை தென் துருவப் பகுதியில் தரையிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்