சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணிகளை வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பூத் ஸ்லிப் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதால் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் யாரும் பூத் ஸ்லிப் வழங்க கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்தப் பணிகள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் முதற்கட்டமாக, பூத் கமிட்டி தலைமை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை ஆய்வு செய்து வருகிறார். அவரே நேரில் சென்று இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}