சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்த பணிகளை வரும் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பூத் ஸ்லிப் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதால் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் யாரும் பூத் ஸ்லிப் வழங்க கூடாது என தேர்தல் ஆணையம் ஏற்கனவே திட்டவட்டமாக கூறியிருந்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இந்தப் பணிகள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் முதற்கட்டமாக, பூத் கமிட்டி தலைமை அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை ஆய்வு செய்து வருகிறார். அவரே நேரில் சென்று இந்தப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}