ஜஸ்ட் ஜந்து நிமிடத்தில் இபாஸ்.. ஒரு பிரச்சினையும் இல்லை.. தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா

May 10, 2024,04:28 PM IST

சென்னை: ஊட்டியில், இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்கி உள்ள நிலையில், ஊட்டிக்குச் செல்ல உங்க மொபைலில் ஐந்து நிமிடத்தில் இ-பாஸ் பெறலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கியுள்ளார்.


கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக  நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 126 மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை தாவரவியல் பூங்காவில்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியாளர் அருணா உடன் இருந்தார்


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு டிஸ்னி வேர்ல்ட் வடிவமைப்பு, 62 ஆயிரம் மலர்களைக் கொண்டு 32 அடி நீளத்தில் மலை ரயில் போன்ற வடிவமைப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மலர் காட்சி இன்று தொடங்கி வரும் இருபதாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைக் காண ஏராளமான மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.




மலர்க் கண்காட்சியை தொடங்கிய வைத்த தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பூந்தொட்டிகள் வைத்து இந்த மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு மூன்று லட்சம் மக்கள் பார்வையிட உள்ளனர் . அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். பொதுமக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பைகளை அங்கும் இங்குமாக போடாமல், பத்திரமாக பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மக்களுடைய பூங்கா,  மக்களுடைய கண்காட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்டது.  அதனால் மக்கள் இந்த கண்காட்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.


இ பாஸ்னால மக்களுக்கு எந்த ஒரு அச்சமும் தேவையில்லை. இது ஒரு சிம்பிளான புராசஸ். வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்கள் செல்போனில் இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். கல்லாறு செக்போஸ்ட்ல கணவர் மனைவி இருவரும் வந்தாங்க. ஆனா அவர்கள் இபாஸ் எடுக்கவில்லை என்று கூறினார்கள். உடனே அங்கேயே இ பாஸ் எடுக்க, எல்லா அதிகாரிகளும் உதவி செய்தாங்க. அதனால உங்களுடைய செல்போன் மூலமாக ஐந்து நிமிடத்தில் எடுத்திடலாம். இதற்காக எந்த ஆபீசுக்கும் போக  வேண்டியது இல்லை. 


நம்ம மொபைல் போனிலிருந்து உடனே நம்மளுடைய வண்டி நம்பர், என்னைக்கு போறோம், என்றைக்கு திரும்புகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து இ பாஸ் எடுக்கலாம். இது ரொம்ப சிம்பிளான ப்ராசஸ். இதனால ஒரு ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை. இ-பாஸ்னால இங்கு போக முடியாது அப்படி ஒன்றும் கிடையாது. தாராளமாக  எப்படி வருகிறீர்களோ அப்படி வாங்க. நாங்க வரவேற்கிறோம். இது சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு. அதை நாங்க பாலோ பண்ணுகிறோம். இ-பாஸ்னால ஒரு கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்