ஜஸ்ட் ஜந்து நிமிடத்தில் இபாஸ்.. ஒரு பிரச்சினையும் இல்லை.. தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா

May 10, 2024,04:28 PM IST

சென்னை: ஊட்டியில், இன்று 126 வது மலர் கண்காட்சி தொடங்கி உள்ள நிலையில், ஊட்டிக்குச் செல்ல உங்க மொபைலில் ஐந்து நிமிடத்தில் இ-பாஸ் பெறலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கியுள்ளார்.


கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக  நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 126 மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியை தாவரவியல் பூங்காவில்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சியாளர் அருணா உடன் இருந்தார்


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒரு லட்சம் மலர்களைக் கொண்டு டிஸ்னி வேர்ல்ட் வடிவமைப்பு, 62 ஆயிரம் மலர்களைக் கொண்டு 32 அடி நீளத்தில் மலை ரயில் போன்ற வடிவமைப்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.  இந்த மலர் காட்சி இன்று தொடங்கி வரும் இருபதாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைக் காண ஏராளமான மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.




மலர்க் கண்காட்சியை தொடங்கிய வைத்த தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா கூறுகையில், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பூந்தொட்டிகள் வைத்து இந்த மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு மூன்று லட்சம் மக்கள் பார்வையிட உள்ளனர் . அனைத்து பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுகிறேன். பொதுமக்கள் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பைகளை அங்கும் இங்குமாக போடாமல், பத்திரமாக பசுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இது மக்களுடைய பூங்கா,  மக்களுடைய கண்காட்சி, மக்களுக்காக உருவாக்கப்பட்டது.  அதனால் மக்கள் இந்த கண்காட்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.


இ பாஸ்னால மக்களுக்கு எந்த ஒரு அச்சமும் தேவையில்லை. இது ஒரு சிம்பிளான புராசஸ். வெறும் ஐந்தே நிமிடத்தில் உங்கள் செல்போனில் இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். கல்லாறு செக்போஸ்ட்ல கணவர் மனைவி இருவரும் வந்தாங்க. ஆனா அவர்கள் இபாஸ் எடுக்கவில்லை என்று கூறினார்கள். உடனே அங்கேயே இ பாஸ் எடுக்க, எல்லா அதிகாரிகளும் உதவி செய்தாங்க. அதனால உங்களுடைய செல்போன் மூலமாக ஐந்து நிமிடத்தில் எடுத்திடலாம். இதற்காக எந்த ஆபீசுக்கும் போக  வேண்டியது இல்லை. 


நம்ம மொபைல் போனிலிருந்து உடனே நம்மளுடைய வண்டி நம்பர், என்னைக்கு போறோம், என்றைக்கு திரும்புகிறோம் போன்ற விவரங்களை பதிவு செய்து இ பாஸ் எடுக்கலாம். இது ரொம்ப சிம்பிளான ப்ராசஸ். இதனால ஒரு ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை. இ-பாஸ்னால இங்கு போக முடியாது அப்படி ஒன்றும் கிடையாது. தாராளமாக  எப்படி வருகிறீர்களோ அப்படி வாங்க. நாங்க வரவேற்கிறோம். இது சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு. அதை நாங்க பாலோ பண்ணுகிறோம். இ-பாஸ்னால ஒரு கட்டுப்பாடும் இல்லை எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

டிசம்பராக மாறும் மே.. நாளை மறுநாள்.. வங்க கடலில்.. புதிய "லோ" உருவாகிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்

news

போதை பொருள் பயன்பாடு... விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுங்க.. வீரலட்சுமி சொல்கிறார்!

news

சென்னை ஐடி பெண்ணின் விபரீத முடிவு.. சமூக வலைதள டிரோல்கள்தான் காரணமா?

news

கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்