சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில், ஜெ பேபி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் என பலர் நடித்து அசத்தியுள்ளனர்.
இப்படத்தினை பா.ரஞ்சித், அபே ஆனந்த் சிங், பியூஸ் சிங், ஸுரப் குப்தா மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டோனி ப்ரிட்டோ இசையமைத்துள்ளார். இப்படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மேலும் வயது முதிர்ந்தவர்களின் உளவியல் சிக்கலை சொல்லி இருக்கும் ஜெ பேபி படம் மக்களை கவர்ந்துள்ளது. பொதுவாக பா ரஞ்சித் தயாரிக்கும் படங்களில் அரசியல் கட்டாயமாக இருக்கும். ஆனால் இப்படம் வழக்கமான அரசியலை பேசும் படமாக இல்லாமல் குடும்ப உறவுகளின் உன்னதத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பேபி (ஊர்வசி) தொலைந்து விடுகிறார். அவரைத் தேடி கண்டுபிடிக்கும் மகன்களின் உண்மை சம்பவத்தை தழுவி இப்படம் அமைந்துள்ளது. அட்டகத்தி தினேஷ் எந்த அளவிற்கு மகன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமோ அந்த அளவிற்கு வித்தியாசமாக நடித்து அசத்தியிருக்கிறார். மேலும் நடிகை ஊர்வசியை சொல்லவே வேண்டாம். தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பதில் கில்லாடி. லொள்ளு சபா மாறனும் எப்போதும் போல காமெடியில் அசத்தாமல் ஊர்வசியின் மற்றொரு மகன் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்கள் அனைவருடைய நடிப்பும் ஜெ பேபி திரைப்படத்திற்கு பிளஸ் என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் சமீபத்தில், வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற, ஜெ பேபி படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இப்படம் உள்ளதால் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய கருத்தை உள்ளடக்கியதாக உள்ளதாம்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}