சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை நடைபெறவிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், பிப்ரவரி 26 ம் தேதி முதல் நடைபெற இருந்த காலவரையற்ற போராட்டமும் வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ- ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருந்தனர். இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் ஜாக்டோ-ஜியோ சங்க உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர், இந்த அறிக்கையை நிராகரிப்பதாகவும், உடனடியாக முதல்வர் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்தித்தனர்.
அப்போது நிதி நிலைமை இப்போது சரியில்லை. சற்று பொறுங்கள். நிதி நிலைமை சீரானவுடன் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார். இதையடுத்து தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைப்பினு் மாநில நிர்வாகி மு.அன்பரசு பேசுகையில், எங்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ வ வேலு, உள்ளிட்ட அமைச்சர்கள் தலைமையில் நேற்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வரின் நேரடியாக சந்தித்து பேச வேண்டும் என்று கூறினோம். அதன் படி முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் 30 ஒருங்கிணைப்பாளர்களும் சந்தித்தோம்.
10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்வரே அழைத்து பேசியதால் எங்கள் நம்பிக்கை நீர்த்துப் போகவில்லை. எங்களது முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட முதல்வர் அவற்றை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். தொடர்ந்து அவர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் நாங்கள் வாபஸ் பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}