அகமதாபாத்: பாகிஸ்தானுடன் விளையாடுவதை விட எனது தாயாரைப் பார்ப்பதற்குத்தான் நான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
அகமதாபாத்தில் அக்டோபர் 14ம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி குறித்து வழக்கம் போல ஹைப் கிளப்பப்பட்டு வருகிறது. ஏதோ இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கப் போவது என்ற பில்டப்களில் பலரும் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அகமதாபாத் வந்துள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார். என்ன பாஸ் பாகிஸ்தானுடன் மோதப் போகும் குஷியா என்று கேட்டால், அட நீங்க வேற.. நான் எங்க அம்மாவைப் பார்க்கப் போறேன்.. அந்த சந்தோஷம்தான் என்று சிரித்தபடி கூறுகிறார் பும்ரா.
உண்மைதான்... பும்ராவுக்கு வேறு எதையும் விட அவரது தாயார்தான் உசத்தி.. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பும்ராவுக்கு 5 வயதாக இருக்கும்போது அவரது தந்தை ஜஸ்பிர் சிங் மரணமடைந்து விட்டார். கைப்பிள்ளையோடு தவித்த பும்ராவின் தாயார் தல்ஜித் கெளர், மிகுந்த தன்னம்பிக்கையோடு தனது பிள்ளையை வளர்த்தார். அவர் ஒரு ஆசிரியை என்பதால் இயல்பிலேயே தனது மகனுக்கு நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். டீச்சர் வளர்த்த பிள்ளை என்பதால் பும்ரா நல்ல பழக்க வழக்கங்களுடன்தான் வளர்ந்து வந்தார்.
பஞ்சாப்தான் பும்ராவின் பெற்றோருக்குப் பூர்வீகம். சீக்கியரான இவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே குஜராத்திற்கு இடம் பெயர்ந்து வந்து செட்டிலானவர்கள். நீண்ட டூர் போய் விட்டு குஜராத் திரும்பினாலே பும்ரா குஷியாகி விடுவார். அம்மாவைப் பார்க்கப் போகிறோம், அம்மா கையால் சாப்பிடப் போகிறோம் என்ற வழக்கமான குழந்தைகளின் சந்தோஷம்தான் அது. இப்போதும் கூட உலகக் கோப்பைப் போட்டிக்காக அங்குமிங்குமாக போய்க் கொண்டிருக்கும் அவர் பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் வந்திருப்பதால் குஷியாகியுள்ளார்.
புதன்கிழமை நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த சந்தோஷத்துடன் தற்போது அம்மாவையம் பார்த்து மகிழ்ந்துள்ளார் பும்ரா.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட 1.30 லட்சம் பேர் இதில் அமர்ந்து போட்டியைப் பார்க்க முடியும். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இதுதான். இங்கு முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளார் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}