TANGEDCO: நீங்க டிப்ளமோ படித்தவரா? அரசு வேலைக்கு செல்ல ஆசையா.. அப்ப இந்த நியூஸ் உங்களுக்குத்தான்!

Jul 05, 2024,05:49 PM IST

சென்னை:   தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் (டான்ஜெட்கோ) டெக்னீசியன் எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப  வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.


தமிழ்நாடு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்கி வருகிறது. அதேபோல் மின்சாரத்தை மின்கடத்திகள் வழியாக கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தையும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு  முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகம் சார்பில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.




தமிழ்நாடு ஜெனரேஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் - tangedco) சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 395, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 22, எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட்டேசன் இன்ஜினியரிங் 9, தகவல் தொழில்நுட்பம் 9, சிவில் இன்ஜினியரிங் 15, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 50, என மொத்தம்  500 காலி பணியிடங்கள் உள்ளன. 


இந்தக் காலி பணியிடங்களை நிரப்ப  வரும் 10.7.24 முதல் 31.7.24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன.  தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூபாய் 8000 வழங்கப்படும்.


கல்வித் தகுதி:


மேற்கண்ட பணிகளுக்கு மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி டிப்ளமோ படிப்பில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏதேனும் ஒன்றில் முழு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் www.tangedco.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். 


குறிப்பு: அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும். apprenticeships பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்