ஐஎஸ்ஐஎஸ்ஸை விட மோசமானது ஹமாஸ்.. அழிக்கப்பட வேண்டும்.. இஸ்ரேலில் ஜோ பிடன் பேட்டி!

Oct 18, 2023,06:17 PM IST

வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காஸா மக்கள் மீது இஸ்ரேல் முரட்டுத்தனமாக தாக்குதல் நடத்தி வரும் பின்னணியில், அப்பாவிகள் பலர் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் வந்து அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார்.


தனது இஸ்ரேல் பயணத்தின்போது பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோர்டான், எகிப்து தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்தார் அதிபர் ஜோ பிடன். ஆனால் காஸா நகரில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோ பிடனை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டார்.




அப்பாஸின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்கா, தற்போது ஜோர்டான், எகிப்து தலைவர்களுடனான சந்திப்பையும் ரத்து செய்து விட்டது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் இப்போது கிட்டத்தட்ட இன அழிப்புப் போராக மாறியுள்ளது. காஸாவை முழுமையாக தரைமட்டமாக்கும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவிகள் பலர் இதில் அநியாயமாக பலியாகி வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி கிஞ்சித்தும் இஸ்ரேல் கவலைப்படுவதாக தெரியவில்லை. காஸாவில் உள்ள அஹில் அரபு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குலில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள், அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.


இதனால் அரபு நாடுகள் அனைத்தும் கடும் ஆத்திரமடைந்துள்ளன. இந்த சம்பவத்தால் கொதிப்படைந்துள்ள பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ஜோ பிடனை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டார். அவரது இந்த நடவடிக்கை அமெரிக்காவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஜோர்டான், எகிப்து தலைவர்களுடனான சந்திப்பை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.


இஸ்ரேலின் பிடிவாதத்தால் கொதி நிலையை இந்தப் போர் எட்டி வருகிறது. இஸ்ரேல் அடங்க வேண்டும்.. அதேபோல ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் தங்களது போரைக் கைவிட வேண்டும். அனைவரும் இணைந்து ஐ.நா. சபையின் மத்தியஸ்தத்தை மதித்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் போர் வேறு பாதையில் திசை திரும்ப வாய்ப்புள்ளதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.


இந்த நிலையில், அதிபர் ஜோ பிடன், இஸ்ரேல் வந்து பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவை . சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் போர் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை விட மோசமானது ஹமாஸ் என்று அதிபர் ஜோ பிடன் வர்ணித்தார். ஹமாஸ் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பிடன், நதன்யாகுவிடம் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்