வாஷிங்டன்: காஸாவை இஸ்ரேல் நீண்ட காலம் ஆக்கிரமித்திருப்பது தவறாகி விடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் செல்லவும் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருகிறது. காஸாவை மட்டுமல்லாமல் மொத்த பாலஸ்தீனத்தையும் அழித்தொழிக்கும் முடிவில் அது இருப்பதாக அஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு அது வெறித்தனமான தாக்குதலை காஸா மீது நடத்தி வருகிறது. வடக்கு காஸா முழுமையாக சேதமடைந்து போய் விட்டது. அங்குள்ள அடிப்படைக் கட்டமைப்புகள், வீடுகள் என எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. அதை மீட்டெடுக்க பல வருடங்களாகும்.
ஆயிரக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் கட்டட இடிபாடுகளை எல்லாம் எடுத்தால் மேலும் பல ஆயிரம் பேரின் பிணங்கள் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் காஸாவைக் கைப்பற்ற அது நினைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாலஸ்தீன மக்களுக்காக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கா இதைப் பார்த்து சுதாரிக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலுக்கு திடீரென அறிவுரை கூற ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு சில அறிவுறுத்தல்களை விட ஆரம்பித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு நேரில் போய் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவையும் நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிடன் கூறியிருப்பதாவது:
போர் விதிகளை மீறாமல் இஸ்ரேல் நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம். அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்றவை கிடைக்க வகை செய்ய வேண்டும். இஸ்ரேல் நீண்ட காலம் காஸாவை ஆக்கிரமித்திருக்க முடியாது. அது தவறாகப் போய் விடும். காஸாவை பாலஸ்தீன நிர்வாகமே கட்டுப்படுத்த வேண்டும். பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிலேயே காஸா இருக்க வேண்டும்.
மாறாக, அதை இஸ்ரேல் நீண்ட காலம் கட்டுப்படுத்த முயன்றால் அது மிகப் பெரிய தவறாகி விடும். என்னைப் பொறுத்தவரை பாலஸ்தீன மக்களுக்கு, காஸா மக்களுக்கு ஹமாஸ் நிச்சயம் பிரதிநிதியாக இருக்க முடியாது. அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட ஹமாஸ் காரணமாகி விட்டது. எனவே அது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது என்றார் பிடன்.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு வருமாறு அதன் பிரதமர், பிடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிடன் செல்வார் என்று தெரிகிறது. இருப்பினும் இதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. சர்ப்பிரைஸாக பிடனின் இஸ்ரேல் பயணம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}