டில்லி : டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக 8 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள விவகாரம் டில்லி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 05ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மியை அகற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. இதனால் மக்களை கவருவதற்காக பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளன.

டில்லி தேர்தலுக்கு பிறகு இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் டில்லி சட்டசபையில் தற்போது எம்எல்ஏ.,க்களாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பிஜ்வாசன், நரேஷ் யாதவ், பவன்குமார் சர்மா, பூபேந்தர் சிங் ஜூன் உள்ளிட்ட 8 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் தங்களுக்கு போட்டியிட இந்த முறை கட்சி தலைமை வாய்ப்பு அளிக்காததால் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் இரண்டு முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆம்ஆத்மி தலைமை சீட் தர மறுத்தது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன் இவர்கள் கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 8 எம்எல்ஏ.,க்களின் இந்த செயல்பாடு ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளே ஆம்ஆத்மி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது இந்த முறை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சொல்லி துவங்கி உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வது? இருக்கும் இந்த 4 நாட்களுக்கும் மக்களிடம் குறைந்துள்ள தங்களின் மதிப்பை எப்படி உயர்த்துவது என தெரியாமல் ஆம்ஆத்மி குழப்பத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சி தந்த அதிர்ச்சி!
பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!
இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!
பெற்று வளர்த்த தாய்மடி
மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??
ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்
{{comments.comment}}