டில்லி : டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக 8 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள விவகாரம் டில்லி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 05ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மியை அகற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. இதனால் மக்களை கவருவதற்காக பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளன.

டில்லி தேர்தலுக்கு பிறகு இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் டில்லி சட்டசபையில் தற்போது எம்எல்ஏ.,க்களாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பிஜ்வாசன், நரேஷ் யாதவ், பவன்குமார் சர்மா, பூபேந்தர் சிங் ஜூன் உள்ளிட்ட 8 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் தங்களுக்கு போட்டியிட இந்த முறை கட்சி தலைமை வாய்ப்பு அளிக்காததால் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் இரண்டு முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆம்ஆத்மி தலைமை சீட் தர மறுத்தது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன் இவர்கள் கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 8 எம்எல்ஏ.,க்களின் இந்த செயல்பாடு ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளே ஆம்ஆத்மி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது இந்த முறை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சொல்லி துவங்கி உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வது? இருக்கும் இந்த 4 நாட்களுக்கும் மக்களிடம் குறைந்துள்ள தங்களின் மதிப்பை எப்படி உயர்த்துவது என தெரியாமல் ஆம்ஆத்மி குழப்பத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு... 10 பேர் பட்டியல்.. 3வது இடத்தில் கே.ஏ.செங்கோட்டையன்!
விஜய்யால் தான் கரூர் சம்பவம் நடந்தது...டி.கே.எஸ். இளங்கோவன் கடும் விமர்சனம்
பாஜக பொதுக்கூட்ட பேனரில் டிடிவி தினகரன் படம் ...கூட்டணி தகவல் உண்மை தானா?
விஜய்யின் பொங்கல் வாழ்த்து: தமிழகத்தில் மீண்டும் வெடித்த தமிழ்ப் புத்தாண்டு விவாதம்
திருவள்ளுவர் தினம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நான்கு வாக்குறுதிகள்!
திருவள்ளுவர் தினம்...அனைவரும் திருக்குறள் படிங்க...பிரதமர் மோடி வேண்டுகோள்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
சூர்யா முதல் தனுஷ் வரை...டாப் ஹீரோக்கள் படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்
{{comments.comment}}