சீட் கிடைக்காத கோபம்.. 8 எம்எல்ஏ.க்கள் ராஜினாமா.. தேர்தல் நேரத்தில் ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலி

Feb 01, 2025,10:21 AM IST

டில்லி :   டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக 8 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள விவகாரம் டில்லி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 05ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மியை அகற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. இதனால் மக்களை கவருவதற்காக பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளன.




டில்லி தேர்தலுக்கு பிறகு இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் டில்லி சட்டசபையில் தற்போது எம்எல்ஏ.,க்களாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பிஜ்வாசன், நரேஷ் யாதவ், பவன்குமார் சர்மா, பூபேந்தர் சிங் ஜூன் உள்ளிட்ட 8 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் தங்களுக்கு போட்டியிட இந்த முறை கட்சி தலைமை வாய்ப்பு அளிக்காததால் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இவர்களில் சிலர் இரண்டு முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆம்ஆத்மி தலைமை சீட் தர மறுத்தது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன் இவர்கள் கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 8 எம்எல்ஏ.,க்களின் இந்த செயல்பாடு ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளே ஆம்ஆத்மி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது இந்த முறை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சொல்லி துவங்கி உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வது? இருக்கும் இந்த 4 நாட்களுக்கும் மக்களிடம் குறைந்துள்ள தங்களின் மதிப்பை எப்படி உயர்த்துவது என தெரியாமல் ஆம்ஆத்மி குழப்பத்தில் உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!

news

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்

news

பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

news

ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

news

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

news

சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!

news

ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்

news

போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

news

கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்