- க.யாஸ்மின் சிராஜூதீன்
காடும் கடலும் நமக்குதான்
இயற்கை அன்னையின் கொடையும்தான்....
காடு நிறைந்தால் பசுமைதான்
கிடைக்கும் தூய காற்றுதான்....
கடலும் இருக்கு நிரம்பிதான்
கிடைக்கும் மெத்த வளங்கள்தான்...
இரண்டும் உயிரின வாழிடம்தான் ....
காட்டை அழித்தால் ஊர்கள்தான்
கடல் பொங்கினால் ஊரில்தான்
இதனால் விளையும் ஊறுதான்
உயிர்கள் எங்கு வாழும்தான் .....
அதனதன் இடத்தில் இருந்தாலே
சீறும் சிறப்புமாய் வாழலாம் ....

இயற்கையை சீண்டாமல்
மாற்றம் எதுவும் செய்யாமல்
சிந்தனையை சீண்டி செயலாக்கு
சேதம் எல்லாம் வளமாகும்....
காடும் கடலும் முக்கியம்
மனித வளத்தை காக்கும் பொக்கிஷம்....
அள்ளி கொடுக்கும் கொடையும்தான்...!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு
டிசம்பர் 15ம் தேதியோடு கிளம்பிருங்க.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அடிடாஸ்!
The Power of a Teacher
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
{{comments.comment}}