ஈரோடு இடைத் தேர்தல் முடியட்டும்.. "ஒரே ஒரு அதிமுக"தான் இருக்கும்.. கடம்பூர் ராஜு

Jan 22, 2023,11:15 AM IST

கோவில்பட்டி: ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எந்த அணியும் இருக்காது. ஒரே அணிதான், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜு பேசினா். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் எதிரிகளைக் கூட எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் ஒரே ஒரு துரோகியை சமாளிப்பதுதான் சங்கடமானது. 

2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரே தலைமை என்ற முடிவை எடுத்தோம். ஆனால் அதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

ஈரோடு இடைத் தேர்தல் பெரும் திருப்புமுனையாக இருக்கும். இந்தத் தேர்தல் முடியட்டும்.. அந்த அணி இந்த அணி என்று எந்த அணியும் பிறகு இருக்காது. ஒரே அணி, அது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்றார் கடம்பூர் ராஜு.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்