சென்னை: காதலிக்க நேரமில்லை படம் பலரையும் கவர்ந்துள்ளது. நடிகர் ரவி மோகனுக்கு சூப்பரான கம் பேக் படமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் கதையில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்குமா என்றால் இல்லை என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டியுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம்தான் காதலிக்க நேரமில்லை. இதில் ரவி மோகன் கதாநாயகனாகவும் நித்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.

ரவி, வினய், யோகி பாபு மூவரும் நண்பர்கள். இதில் வினய் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் நடிகர்கள் நடிக்கத் துணியாத பாத்திரம் அது. அதை தில்லாக ஏற்று நடித்துள்ளார் வினய். அதற்காகவே பாராட்டலாம். ஆனால் மலையாளத்தில் மம்முட்டி இந்த ரோலில் ஏற்கனவே நடித்து விட்டார் என்பதையும் இங்கு சொல்ல வேண்டியுள்ளது.
சரி படத்தின் கதை என்ன...?
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் காதலை, தங்களின் எதிர்கால வாழ்க்கையை தங்களுக்குப் பிடித்தது போல் எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதுதான் படத்தின் கதை. அத்தோடு ஆங்காங்கே பல்வேறு விஷயங்களையும் நிரவித் தெளித்து தனது திறமையை அழகாக நிரூபித்துள்ளார்.
நடிப்பு என்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். நித்தியா மேனன் நடிப்பு ராட்சசி என்று சொல்லலம். அத்தனை அழகாக, எதார்த்தமாக இருக்கிறது அவரது நடிப்பு. ரவி மோகனுக்கு இது ஒரு கம் பேக் படமாக அமையும் என்று நம்பலாம். வினய், யோகி பாபு என்று மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாகவும், அழகாகவும் நடித்துக் கொடுத்துள்ளனர்.

படம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால் பதிலை யோசித்துதான் சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய டூ கே கிட்ஸ் படத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக எடுத்துக்கொண்டு நகர்வார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸுக்கு முந்தைய தலைமுறையினர், கண்டிப்பாக விமர்சனம் செய்யக்கூடிய படமாகத்தான் காதலிக்க நேரமில்லை வந்துள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு இது எதார்த்தம் என்றாலும் கூட, நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதே அவர்களின் தீர்ப்பாக இருக்கும்.
But ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும்.. கிருத்திகா உதயநிதி, ஒரு இயக்குநராக பல படி தன்னை மேம்படுத்திக் கொண்டு உயர்ந்து நிற்கிறார்... hats off to her!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}