சென்னை: திருமணமானதுமே கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் நன்றாக வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை உள்ளது.
தற்போது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் திருமணத்துக்கு முன்னரே கமிட் ஆனார். பல்வேறு காரணங்களால் அதன் சூட்டிங் நடக்காமல் இருந்தது. இப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக காஜல் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், காஜல் அகர்வாலின் சமீபத்திய பேட்டியில், திருமணமானதுமே கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் நன்றாக வருகின்றன. எனது சினிமா வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் எந்த வித்தயாசமும் தெரியவில்லை. நான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எனது குடும்பத்துக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறேன்.
இந்தியில் திருமணமான பிறகும் கதாநாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் பிசியாக நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு சினிமாதுறையில் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். தெலுங்கிலும் விரைவில் மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}