சென்னை: பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ டி திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், குறுகிய காலத்திற்குள் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கவர்ந்து சாதனை படைத்து வருகிறது.
குறிப்பாக கமல்ஹாசன் தோன்றும் அந்தக் கடைசி நேரக் காட்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமான செட்டு மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் அமிதாப்பச்சன்,பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டிஜோர்ட்டஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஃபேண்டஸி சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி அஸ்வினி தத், பிரியங்கா தத், ஸ்வப்னா தத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் இப்பட வெளியீட்டிற்கு எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கல்கி 28 98 ஏடி படத்தின் முன்னோட்ட வெளியீடு விழா சென்னையில் உள்ள பிஆர்பி சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இப்பட தயாரிப்பாளர் அஸ்வின் கலந்துகொண்டு கல்கி 2898 ஏடி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டத்தில்,இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்... 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... இதை தடுக்க நினைக்கும் கும்பல் ... புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்... பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா... புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.
பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும், ஆக்சன் பாணியில் வசனங்களும், கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இது தவிர ரசிகர்கள் ட்ரெய்லரில் கமல் கெட்டப்பை, ரசித்து பகிர்ந்தும் வருகின்றனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}