கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம்.. முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Jun 20, 2024,11:05 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சேலத்தில் 8 பேரும், புதுச்சேரியில் மூன்று பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 




இதில் சம்பந்தப்பட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற குற்றங்களை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய ஆட்சியாளர்களை நியமித்துள்ளது தமிழக அரசு.இதனால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, நேற்று அமைச்சர்கள் ஏ.வா வேலு,பொன்முடி ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுவரை பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அமைச்சர்கள் ஏ.வா வேலு, பொன்முடி, டிஜிபி உளவுத்துறை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்