சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சேலத்தில் 8 பேரும், புதுச்சேரியில் மூன்று பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதில் சம்பந்தப்பட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற குற்றங்களை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய ஆட்சியாளர்களை நியமித்துள்ளது தமிழக அரசு.இதனால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, நேற்று அமைச்சர்கள் ஏ.வா வேலு,பொன்முடி ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அமைச்சர்கள் ஏ.வா வேலு, பொன்முடி, டிஜிபி உளவுத்துறை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}