சென்னை: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எம்.பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸார் நேற்றிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி தனது அனல் உரையை ஆற்றவுள்ளார்.
இந்தப் பின்னணியில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீதியை பலி கொடுத்து விட்டு பெரும் அதிகாரம் நீடிக்காது. உண்மையும், நேர்மையும் இருந்தால்தான் அங்கு நீதி தழைத்திருக்கும். மக்கள் உரிய முறையில் குரல் எழுப்பும்போது, உரிமையை வலியுறுத்தும்போதும்தான் உண்மை உயிரோடு இருக்கும்.
ராகுல் காந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்திருக்கிறது. உரிய நேரத்தில் உரியதை அது செய்துள்ளது.
நமது பலத்தை காட்ட மட்டுமே அதிகாரத்தை கையில் எடுத்தால், சாமானியனும் கூடகொதித்தெழுவான், பொங்கி எழுவான். இதை அதிகாரத்திலும், அதிகார பலத்தில் மிதப்போரும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையிலானது நீதி வெல்லும், வென்றே தீரும்.
நாடு முழுக்க சாமானிய மக்களின் கோபம் அதிகரிப்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.. அதனால் தான் அது நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}