சென்னை: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எம்.பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸார் நேற்றிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி தனது அனல் உரையை ஆற்றவுள்ளார்.
இந்தப் பின்னணியில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீதியை பலி கொடுத்து விட்டு பெரும் அதிகாரம் நீடிக்காது. உண்மையும், நேர்மையும் இருந்தால்தான் அங்கு நீதி தழைத்திருக்கும். மக்கள் உரிய முறையில் குரல் எழுப்பும்போது, உரிமையை வலியுறுத்தும்போதும்தான் உண்மை உயிரோடு இருக்கும்.
ராகுல் காந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்திருக்கிறது. உரிய நேரத்தில் உரியதை அது செய்துள்ளது.
நமது பலத்தை காட்ட மட்டுமே அதிகாரத்தை கையில் எடுத்தால், சாமானியனும் கூடகொதித்தெழுவான், பொங்கி எழுவான். இதை அதிகாரத்திலும், அதிகார பலத்தில் மிதப்போரும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையிலானது நீதி வெல்லும், வென்றே தீரும்.
நாடு முழுக்க சாமானிய மக்களின் கோபம் அதிகரிப்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.. அதனால் தான் அது நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}