சென்னை: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எம்.பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸார் நேற்றிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி தனது அனல் உரையை ஆற்றவுள்ளார்.
இந்தப் பின்னணியில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீதியை பலி கொடுத்து விட்டு பெரும் அதிகாரம் நீடிக்காது. உண்மையும், நேர்மையும் இருந்தால்தான் அங்கு நீதி தழைத்திருக்கும். மக்கள் உரிய முறையில் குரல் எழுப்பும்போது, உரிமையை வலியுறுத்தும்போதும்தான் உண்மை உயிரோடு இருக்கும்.
ராகுல் காந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்திருக்கிறது. உரிய நேரத்தில் உரியதை அது செய்துள்ளது.
நமது பலத்தை காட்ட மட்டுமே அதிகாரத்தை கையில் எடுத்தால், சாமானியனும் கூடகொதித்தெழுவான், பொங்கி எழுவான். இதை அதிகாரத்திலும், அதிகார பலத்தில் மிதப்போரும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையிலானது நீதி வெல்லும், வென்றே தீரும்.
நாடு முழுக்க சாமானிய மக்களின் கோபம் அதிகரிப்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.. அதனால் தான் அது நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}