ஊழல் நடப்பதற்கு மக்களும்தான் காரணம்.. மக்கள் இல்லாமல் ஊழல் நடக்குமா.. கமல்ஹாசன் அதிரடி

Jun 25, 2024,04:30 PM IST

 சென்னை: ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல, பொதுமக்களாகிய நாமும் தான் காரணம். நாம் இல்லாமல் எப்படி இந்த ஊழல்கள் நடக்கும் என்று இந்தியன் 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.


1996ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். அப்படத்தில், இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருந்தார்.இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். இவருடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.இந்தியன் படம் வெளிவந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 




இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம்  ஜூலை மாதம் 12ம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


இந்த படத்தின் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், அனிருத், தம்பி ராமையா உள்ளிட்டோ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:


இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு கருவை இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.  இந்தியன் தாத்தா இரண்டாம் வருகைக்கு மிகப்பெரிய அர்த்தமே இருக்கிறது. இந்தப் படம் ஐந்து வருடம் ஆறு வருடம் எடுத்ததற்கு காரணம் நடிகர்களோ தயாரிப்பாளர்களோ அல்ல. இயற்கை கோவிட்ல இருந்து விபத்துகளில் இருந்து பல விஷயங்களை இடையூறாக வந்து, அதிலிருந்து எல்லாம் எங்களை மீட்டு எடுத்து சுமந்து வந்த லைக்கா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2 நடிகர்கள் கடமைப்பட்டிருப்போம்.


வெற்றியை அனுபவிக்க வேண்டிய முதல் ஆட்களாக அவர்கள் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஷங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக இருக்கிறது என்று பேசினார்.


அதன் பின்னர்  செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ஊழல் நடப்பதற்கு அரசியல் வாதிகள் மட்டும் காரணம் அல்ல, பொதுமக்களாகிய நாமும் தான் காரணம், நாம் இல்லாமல் இந்த ஊழல்கள் நடக்குமா? என கேள்வி எழுப்பினார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்