என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

Jun 10, 2025,11:47 AM IST

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் படத்தை எதிர்பார்த்த தேதிக்கு முன்னதாக, அதாவது தியேட்டரில் படம் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தக்லைஃப். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகியன இணைந்து தயாரித்துள்ளன. சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 05ம் தேதி கர்நாடக தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. பல விதமான சர்ச்சை, வழக்குகள் காரணமாக கர்நாடகாவில் மட்டும் தற்போது வரை இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை உள்ளது.


ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தக்லைஃப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களின் ஆதரவை பெற தவறவிட்டது. இந்த படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.149.7 கோடிக்கு வாங்கி இருந்தது. தியேட்டரில் படம் ரிலீசான 8 வாரங்கள் கழித்தே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என கமல்ஹாசன் உறுதியாக அறிவித்திருந்தார். வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 28 நாட்களுக்கு பிறகு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யலாம். ஆனால் தக்லைஃப் படத்தை 56 நாட்கள் கழித்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கமல் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் 7 ம் தேதி ஓடிடி.,யில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.




ஆனால் தற்போது நிலைமையே வேறு. தியேட்டர்களில் ரசிகர்களின் ஆதரவையும் இந்த படம் பெறவில்லை. மற்றொரு புறம் சுப்ரீம் கோர்ட், கர்நாடகா ஐகோர்ட் என பலவற்றிலும் தக்லைஃப் படத்திற்கு எதிராக வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தான் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நஷ்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக தியேட்டரில் படம் ரிலீசான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்து விடலாம் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வழக்குகளின் முடிவு என்ன ஆகுமோ என்ற நிலையில் நெட்ஃபிளிக்சால் இப்படி ஒரு சோதனை தக்லைஃப் படத்திற்கு வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்