சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிவாரண பணிகளை இன்று தொடங்கினா்.
மிச்சாங் புயல் உருவாகி சென்னையே புரட்டிப் போட்டு விட்டது. அதீத புயல் மழையால் சென்னை முழுவதும் மழை நீரால் தனித்தீவு ஆனது. மின்சாரம், அத்தியாவாசிய பொருள்கள், தொலைத்தொடர்பு , போன்றவை எதுவும் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்து வருவதற்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சில பகுதிகளில் தண்ணீர் வடிந்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் இருகின்றது. மேலும் தேங்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.
கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று காலை 8 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலிருந்து மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு உதவும் நேரம் இது. இதில் அரசியல் பேசக் கூடாது, செய்யக் கூடாது . அனைவரும் களம் இறங்கிச் செயலாற்ற வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}