அ்.சீ.லாவண்யா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டிசம்பர் 8ம் தேதி, கோவிலைச் சுற்றியுள்ள 149 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிசம்பர் 8ம் தேதி காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேகம் காரணமாக, நகரம் முழுவதும் பண்டிகை உற்சாகம் மலர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில் உள்ள 149 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
.jpg)
லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்தைக் கொண்டாட காஞ்சிபுரம் முழுவதும் சுத்திகரிப்பு, அலங்கார வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
நட்பே வா!
இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!
ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!
{{comments.comment}}