கண்ணதாசனினின் இயேசு காவியம்!

Feb 07, 2026,03:08 PM IST

- தி.மீரா


கவிஞர் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம் என்பது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை மட்டும் சொல்லும் நூல் அல்ல; அது மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு சிந்தனைப் படைப்பு. கண்ணதாசன் தனது தனித்துவமான கவிதை மொழியில் ஆன்மீக உண்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் இணைத்து எழுதியுள்ளார்.


கண்ணதாசன் எந்த ஒரு மதத்தை உயர்த்திப் பேசும் நோக்கில் மட்டும் எழுதவில்லை. அவர் சொல்ல விரும்பியது:


மனிதன் அன்புடன் வாழ வேண்டும், பிறருக்கு உதவும் மனம் வேண்டும், தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும், 

பகை விட மன்னிப்பு மேல் ஆகியவற்றைத்தான்.


இந்த காவியம் இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, மக்களுக்கு அளித்த போதனைகள், நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் காட்டிய கருணை மனித குல நலனுக்காக செய்த தியாகம் இவற்றை கவிதை வடிவில் எடுத்துரைக்கிறது.




கண்ணதாசனின் எழுத்து சிறப்பு குறிப்பிடத்தக்கது. எளிமையான தமிழ்  யாரும் புரிந்து கொள்ளலாம், உவமை, உருவகம் நிறைந்த கவிதை நடை, உணர்ச்சியைத் தொடும் சொற்கள், சிந்திக்க வைக்கும் வரிகள், அவர் இயேசுவை ஒரு மதத் தலைவராக மட்டுமல்ல, மனித நேயத்தின் உருவமாக காட்டுகிறார்.


“இயேசு காவியம்” நமக்கு சொல்லும் முக்கியமான பாடங்கள்:


அன்பு காட்டினால் உலகம் மாறும், மன்னிப்பு மனிதனை உயர்த்தும், தாழ்மை பெரிய குணம், பிறருக்காக வாழ்வது உயர்ந்த வாழ்க்கை


இந்த படைப்பு தமிழ் இலக்கியத்தில் ஒரு தனி இடம் பெற்றது, ஏனெனில், கிறிஸ்தவ சிந்தனையை தமிழ் கவிதை வடிவில் அழகாக வழங்கியது, மதங்களைத் தாண்டிய மனிதநேயம் பேசப்பட்டது, எல்லா வாசகர்களுக்கும் ஏற்ற நூலாக அமைந்தது


“இயேசு காவியம்” என்பது ஆன்மீகக் கவிதை மட்டுமல்ல; நல்ல மனிதராக வாழ கற்றுத்தரும் வழிகாட்டி. அன்பு, கருணை, மன்னிப்பு, தியாகம் ஆகியவை வாழ்க்கையை உயர்த்தும் என்பதையே கண்ணதாசன் இந்த காவியத்தின் மூலம் நினைவூட்டுகிறார்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Vote of Confidence: சட்டசபையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் விஜய்

news

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.. சட்டசபையில் முதல்வர் விஜய் கன்னிப் பேச்சு

news

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்றார் எடப்பாடி பழனிச்சாமி.. சி.வி.சண்முகம் பரபரப்புப் பேட்டி

news

கொண்டாட்டம் என்ற பெயரில் மக்களை தொந்தரவு செய்யாதீர்கள்.. தவெகவினருக்கு உத்தரவு

news

எனக்கு முதல்வர் பதவி தர முன்வந்தார்களா.. விசிக திருமாவளவன் அதிரடி விளக்கம்!

news

அதிமுக-திமுக கூட்டணி சேர முடிவு செய்ததா.. ஆணித்தரமாக மறுத்த ஆலந்தூர் பாரதி

news

Tasmac: வந்த உடனேயே ஆக்ஷனில் இறங்கிட்டீங்களே.. முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

news

டாஸ்மாக் கடைகள் மீது கை வைத்த முதல்வர் விஜய்.. முதல் கட்டமாக 717 கடைகள் குளோஸ்!

news

தவெக-விற்கு ஆதரவு தெரிவித்த காமராஜ் எம்.எல்.ஏ .. அமமுக-விலிருந்து நீக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்