உடல் நலம் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட மனைவி.. கவனிக்க முடியாமல் தவித்த 90 வயது தாத்தா.. விபரீத முடிவு!

Sep 24, 2024,03:23 PM IST

நாகர்கோவில்:   நாகர்கோவிலில் 85 வயது மனைவி சிரமப்படுவதைக் காண சகிக்காமல், அவரை கருணை கொலை செய்த 90 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன் கோடு ஆசாரிவிளையை சேர்ந்தவர் சந்திர போஸ். இவருக்கு வயது 90. இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 85 வயதாகிறது. இருவருக்கும் 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.  6 பேருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவர்களை பிள்ளைகள் சரியாக கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.




வயது முதிர்வு காரணமாக சந்திர போஸ்சுக்கும், லட்சுமிக்கும் நோய், உடல் நல பாதிப்பும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையிலும், சந்திரபோஸ் வேலை செய்து சம்பாதித்து தனது மனைவி லட்சுமியை கவனித்து வந்துள்ளார்.  சந்திரபோஸிற்கும் வயது முதிர்வு  காரணமாக கண் பார்வை போயுள்ளது. இவரால் தனது மனைவி லட்சுமியை பார்க்க முடியவில்லை. 3 மகன்களும் ஷிப்ட் முறையில் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.  


இந்த நிலையில், லட்சுமி நோய் முற்றி, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். படுத்தே இருப்பதாலும், துணி கூட மாற்ற இயலாத நிலையில் இருந்ததாலும் அவரது உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். மனைவியை பராமரிக்க முடியாமல் தவித்துள்ளார் சந்திரபோஸ். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து சந்திரபோஸ் கொலை செய்து விட்டார். கொலை செய்த பின்னர் முதியவர் சந்திரபோஸ் வாசலில் உட்கார்த்து கொண்டு அழுதுள்ளார். 


சாப்பாடு கொண்ட வந்த இளைய மகன், அப்பா அழுது கொண்டிருப்பதைப் பார்த்து குழப்பமடைந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அவரது தாயார் லட்சுமி  இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் லட்சுமியை கை பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண் பார்வையற்று இருந்த முதியவர் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். சந்திரபோஸின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை மருத்துவமைனயில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்