கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் நாளை (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகானந்தர் பாறைக்கு கடலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வகையில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த புதிய கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.37 கோடி மதிப்பீட்டில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Bowstring arch bridge கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலத்தில் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைப்பட்டுள்ளது. இதனால் கடலின் அழகை ரசித்தபடி பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையின் அழகையும் ரசிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகாந்தர் பாறைக்கு செல்ல வேண்டும் என்றால் படகு மூலம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர். ஆனால் இனி இந்த புதிய கண்ணாடி பாலத்தின் வழியாக நடந்து சென்றே சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். டிசம்பர் 30 ம் தேதி மாலை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவரின் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு பிறகு புத்தாண்டு முதல் இந்த புதிய கண்ணாடி பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவிலேயே கடல் மீது இப்படிப்பட்ட கண்ணாடிப் பாலம் முதல்முறையாக கன்னியாகுமரியில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள கூடுதல் சிறப்பாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்தது தற்கொலைப் படைத் தாக்குதலா.. புதுத் தகவல் வெளியானது!
தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
கூட்ட நெரிசல் விவகாரம்.. அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விரைவில் கரூர் வருகை
நடிகர் தர்மேந்திரா நலமாக இருக்கிறார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. மகள் ஈஷா தியோல் கோரிக்கை
பீகார் சட்டசபைத் தேர்தல்.. 2வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 11, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்
அனைத்துக் கோணங்களிலும் விசாரணை.. உண்மையை கண்டறிவோம்.. அமைச்சர் அமித்ஷா
டெல்லி செங்கோட்டை அருகே.. கார் வெடித்துச் சிதறியது.. பலர் பலி.. டெல்லி முழுவதும் உஷார்
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மனதை உலுக்கியது.. ராகுல் காந்தி, பிரியங்கா வேதனை
{{comments.comment}}