கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் நாளை (டிசம்பர் 30) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகானந்தர் பாறைக்கு கடலுக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வகையில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் இந்த புதிய கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.37 கோடி மதிப்பீட்டில், 77 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் ஆகியவற்றை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Bowstring arch bridge கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலத்தில் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைப்பட்டுள்ளது. இதனால் கடலின் அழகை ரசித்தபடி பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையின் அழகையும் ரசிக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருவள்ளுவர் சிலையில் இருந்து, விவேகாந்தர் பாறைக்கு செல்ல வேண்டும் என்றால் படகு மூலம் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர். ஆனால் இனி இந்த புதிய கண்ணாடி பாலத்தின் வழியாக நடந்து சென்றே சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். டிசம்பர் 30 ம் தேதி மாலை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த புதிய கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவரின் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதற்கு பிறகு புத்தாண்டு முதல் இந்த புதிய கண்ணாடி பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவிலேயே கடல் மீது இப்படிப்பட்ட கண்ணாடிப் பாலம் முதல்முறையாக கன்னியாகுமரியில்தான் அமைக்கப்பட்டுள்ளது என்பது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள கூடுதல் சிறப்பாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
ஆன்மீகம் அறிவோம்.. தேவலோகத்திலிருந்து.. பூமிக்கு வந்தபோது.. சிவன் என்ன செய்தார் தெரியுமா?
தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
கையழுத்துப் போட்டுக் கொடுத்த அந்தக் கைகள்.. ஏவிஎம் சரவணன் குறித்து நெகிழ்ந்த வைரமுத்து
{{comments.comment}}