களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், வேகமாக வந்த கார் ஒன்று இன்னொரு கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது இரண்டு கார்களுக்கும் இடையே சிக்கிய பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயத்தைப் பார்த்து மக்கள் ஸ்தம்பித்துப் போயினர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பாறசாலை பகுதியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் சாலையோரமாக பழைய பேரீச்சம்பழக் கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்கு முன்பாக ஒரு கார் நின்றிருந்தது. அந்தக் காருக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் நைட்டியும், மேலே துப்பட்டாவும் போட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
நின்றிருந்த காரை தாண்டி இந்தப் பக்கம் வரும்போது எதிர்பாராதவிதமாக எதிர் புறம் படு வேகமாக ஒரு கார் அவரை நோக்கி மோதுவது போல வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சுதாரித்து வேகமாக இந்தப் பக்கம் வருவதற்குள் கார் அவரை உரசியபடி பார்க் செய்து நின்றிருந்த கார் மீது மோதி சாலையில் போய் கவிழ்ந்து விழுந்தது.
கார் உரசிய வேகத்தில் அந்தப் பெண்ணின் துப்பட்டா காரோடு போய் விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. சிறு சேதாரம் கூட இல்லாமல் அப்பெண் உயிர் தப்பினார். கார் விழுந்த வேகத்தில் அந்தப் பக்கமாக டூவீலரில் ஒரு தம்பதி வந்து கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கார் அவர்களுக்கு முன்பாகவே நின்று விட்டது. இதனால் அவர்களும் உயிர் தப்பினர். கார் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார்.
இந்த விபத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் கூடி விபத்தை ஏற்படுத்திய காரை நிமிர்த்து சாலையோரமாக கொண்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}