தமிழக பார்டரில் மட்டுமே பரபரப்பு.. பிசுபிசுத்துப் போன பெங்களூரு பந்த்

Sep 26, 2023,04:42 PM IST

பெங்களூரு :காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இன்று பெங்களூரில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்தேறியது. அதேசமயம், எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீரை திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

கர்நாடக அரசு இதனை ஏற்கவில்லை. காவிரி ஆற்றில் இருந்து குறைந்த அளவு நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் 23 தமிழர்கள் அதிகம் வாழும் மாண்டியா பகுதியில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக்கூடாது என பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


மேலும் கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்ற பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட கடைகள் ,வணிக வளாகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின. பெங்களூரும் முழுவதும் பாதுகாப்பு பணியில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


தமிழக எல்லைப் பகுதி:


முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. தமிழக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. சரக்கு லாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில்  நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு பின் வாகனங்கள் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா அரசை கண்டித்து காவிரி டெல்டா பகுதியான தஞ்சை செங்கிப்பட்டியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி செய்த நிலையில் 10லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.  இந்நிலையில் இன்று தஞ்சை செங்கிப்பட்டியில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கும்பகோணம் மற்றும் தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை  கைது செய்தனர். மேலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் எனவும், கர்நாடக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்