பெங்களூரு :காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இன்று பெங்களூரில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்தேறியது. அதேசமயம், எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீரை திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .
கர்நாடக அரசு இதனை ஏற்கவில்லை. காவிரி ஆற்றில் இருந்து குறைந்த அளவு நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் 23 தமிழர்கள் அதிகம் வாழும் மாண்டியா பகுதியில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக்கூடாது என பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
மேலும் கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்ற பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட கடைகள் ,வணிக வளாகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின. பெங்களூரும் முழுவதும் பாதுகாப்பு பணியில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழக எல்லைப் பகுதி:
முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. தமிழக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. சரக்கு லாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு பின் வாகனங்கள் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசை கண்டித்து காவிரி டெல்டா பகுதியான தஞ்சை செங்கிப்பட்டியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி செய்த நிலையில் 10லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. இந்நிலையில் இன்று தஞ்சை செங்கிப்பட்டியில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கும்பகோணம் மற்றும் தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர். மேலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் எனவும், கர்நாடக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}