கர்நாடகாவிலும் அதிமுக பஞ்சாயத்து.. ஓபிஎஸ்.,ஐ விடாமல் துரத்தும் எடப்பாடி!

Apr 23, 2023,12:45 PM IST
பெங்களூரு : அதிமுக கட்சி விவகாரம் தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாது கர்நாடகாவிலும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை களம் இறங்கி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமை யாருக்கு, இரட்டை இலை சின்னம் யாருக்கு என ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புகள் இடையே பல மாதங்களாக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்று அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து வந்தார் ஓபிஎஸ். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படலாம் என கோர்ட் உத்தரவு அளித்த பிறகும், அதை எதிர்த்தும் வழக்கு தொடர்ந்தார். இப்படி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈபிஎஸ் அணி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக, ஓபிஎஸ்.,ம் வேட்பாளரை அறிவித்து, அவர் மனுத் தாக்கலும் செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் பாஜக தலையிட்டு, ஓபிஎஸ் தரப்பிடம் பேசி பின்வாங்க வைத்தது. இதில் அதிமுக வேட்பாளராக ஈபிஎஸ் தரப்பு வேட்பாளரே போட்டியிட்டார். இருந்தும் அதிமுக விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மே 10 ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ், வேட்பாளரை அறிவித்தார். இவரது வேட்புமனு அதிமுக வேட்பாளர் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில், கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தலைமை சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.




அதிமுக பெயரை ஓபிஎஸ் அணி வேட்பாளர் வேட்பாளர் பயன்படுத்த முடியாது. அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் அதிமுக விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையில் புகாரால் அதிமுக சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் மனு நிராகரிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் நடந்த தேர்தலில் தான் ஓபிஎஸ் தரப்பால் போட்டியிட்டு தங்களின் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால், கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் கூட போட்டியிட முடியாமல் பிரச்சனை துரத்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்