கர்நாடகாவில் 7000 பேருக்கு டெங்கு.. அதிகரிக்கும் பாதிப்பால் மக்கள் அச்சம்

Sep 14, 2023,09:52 AM IST

பெங்களூரு : கர்நாடகா முழுவதும் 7000 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் டெங்கு பரவலால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.


கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000 ஐ கடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4000 க்கும் அதிகமானவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு அதிகரித்து வந்தாலும் கர்நாடகாவில் மிக வேகமாக பரவி வருகிறது.


இது சாதாரணமாக கொசுவால் பரவக் கூடிய நோய் என்பதால் இதற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் கிடையாது. தட்ப வெப்பநிலை மாறும் போது இந்த நோய் பரவுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு பாதித்தவர்களுக்கு வேகமாக ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதற்கு இதுவரை குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் கிடையாது.


அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் கர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் தங்களின் உடல்நலம், உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


புதுச்சேரியிலும் அதிகரிப்பு


இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் டெங்கு அதிகரித்து வருகிறது. அங்கு 2 பேர் அடுத்தடுத்து டெங்குவால் மரணமடைந்துள்ளனர். டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


தண்ணீர் தேங்காமல் வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்