பெங்களூரு : கர்நாடகா முழுவதும் 7000 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் டெங்கு பரவலால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000 ஐ கடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4000 க்கும் அதிகமானவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு அதிகரித்து வந்தாலும் கர்நாடகாவில் மிக வேகமாக பரவி வருகிறது.
இது சாதாரணமாக கொசுவால் பரவக் கூடிய நோய் என்பதால் இதற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் கிடையாது. தட்ப வெப்பநிலை மாறும் போது இந்த நோய் பரவுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு பாதித்தவர்களுக்கு வேகமாக ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதற்கு இதுவரை குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் கிடையாது.
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் கர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் தங்களின் உடல்நலம், உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் அதிகரிப்பு
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் டெங்கு அதிகரித்து வருகிறது. அங்கு 2 பேர் அடுத்தடுத்து டெங்குவால் மரணமடைந்துள்ளனர். டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தண்ணீர் தேங்காமல் வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}