பெங்களூரு : கர்நாடகா முழுவதும் 7000 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் டெங்கு பரவலால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000 ஐ கடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4000 க்கும் அதிகமானவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு அதிகரித்து வந்தாலும் கர்நாடகாவில் மிக வேகமாக பரவி வருகிறது.
இது சாதாரணமாக கொசுவால் பரவக் கூடிய நோய் என்பதால் இதற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் கிடையாது. தட்ப வெப்பநிலை மாறும் போது இந்த நோய் பரவுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு பாதித்தவர்களுக்கு வேகமாக ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதற்கு இதுவரை குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் கிடையாது.
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் கர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் தங்களின் உடல்நலம், உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் அதிகரிப்பு
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் டெங்கு அதிகரித்து வருகிறது. அங்கு 2 பேர் அடுத்தடுத்து டெங்குவால் மரணமடைந்துள்ளனர். டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தண்ணீர் தேங்காமல் வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}