சென்னை: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது குழுத் தலைவர்களை அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அதாவது பிரதமராக நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று விட்டார்.

இந்த நிலையில் மக்களவையில் 5வது பெரிய கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்து அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நிர்வாகிகள் விவரம்:
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி.
மக்களவை திமுக குழு
தலைவர் - டி.ஆர்.பாலு
துணைத் தலைவர் - தயாநிதி மாறன்
கொறடா - ஆ.ராசா
மாநிலங்களவை குழு
தலைவர் - திருச்சி சிவா
துணைத் தலைவர் - மு. சண்முகம்
கொறடா - பி.வில்சன்
இரு அவைகளின் பொருளாளர் - ஜெகத்ரட்சகன்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}