சென்னை: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது குழுத் தலைவர்களை அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அதாவது பிரதமராக நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று விட்டார்.

இந்த நிலையில் மக்களவையில் 5வது பெரிய கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்து அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நிர்வாகிகள் விவரம்:
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி.
மக்களவை திமுக குழு
தலைவர் - டி.ஆர்.பாலு
துணைத் தலைவர் - தயாநிதி மாறன்
கொறடா - ஆ.ராசா
மாநிலங்களவை குழு
தலைவர் - திருச்சி சிவா
துணைத் தலைவர் - மு. சண்முகம்
கொறடா - பி.வில்சன்
இரு அவைகளின் பொருளாளர் - ஜெகத்ரட்சகன்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}