சென்னை: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது குழுத் தலைவர்களை அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அதாவது பிரதமராக நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று விட்டார்.

இந்த நிலையில் மக்களவையில் 5வது பெரிய கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்து அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நிர்வாகிகள் விவரம்:
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி.
மக்களவை திமுக குழு
தலைவர் - டி.ஆர்.பாலு
துணைத் தலைவர் - தயாநிதி மாறன்
கொறடா - ஆ.ராசா
மாநிலங்களவை குழு
தலைவர் - திருச்சி சிவா
துணைத் தலைவர் - மு. சண்முகம்
கொறடா - பி.வில்சன்
இரு அவைகளின் பொருளாளர் - ஜெகத்ரட்சகன்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
{{comments.comment}}