சென்னை: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது குழுத் தலைவர்களை அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அதாவது பிரதமராக நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று விட்டார்.

இந்த நிலையில் மக்களவையில் 5வது பெரிய கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்து அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நிர்வாகிகள் விவரம்:
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி.
மக்களவை திமுக குழு
தலைவர் - டி.ஆர்.பாலு
துணைத் தலைவர் - தயாநிதி மாறன்
கொறடா - ஆ.ராசா
மாநிலங்களவை குழு
தலைவர் - திருச்சி சிவா
துணைத் தலைவர் - மு. சண்முகம்
கொறடா - பி.வில்சன்
இரு அவைகளின் பொருளாளர் - ஜெகத்ரட்சகன்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}