மேடையில் கண்ணீர் விட்ட கார்த்தி.. கட்டிப்பிடித்து தேற்றிய ஜெயம் ரவி.. என்னாச்சு?

Apr 27, 2023,11:48 AM IST
மும்பை : பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷன் விழாவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நடிகர் கார்த்தி கண்ணீர் விட்டார். உடனே ஓடி வந்த ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் ஆகியோர் கார்த்தியை கட்டிப்பிடித்து தேற்றிய வீடியோ சோஷியல் மீடியாவில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

டைரக்டர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல்வர் பாகம் ரூ.500 கோடி வசூல் சாதனை படைத்ததால், இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாகவே ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்த படத்தில் அருள்மொழி வர்மன் அல்லது ராஜ ராஜ சோழன் ரோலில் நடித்த ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்த விக்ரம், வந்தியத் தேவன் ரோலில் நடித்த கார்த்தி, குந்தவை ரோலில் நடித்த த்ரிஷா, பூங்குழலி ரோலில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் டில்லி, ஐதராபாத், கோவை, சென்னை, பெங்களூர் என பல ஊர்களுக்கும் சென்று வருகின்றனர். இவர்களின் தீவிர ப்ரொமோஷன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷன் விழா நடந்தது. இதில் பொன்னியின் செல்வனில் நந்தினி ரோலில் நடித்த ஐஸ்வர்யா ராய், டைரக்டர் மணிரத்னம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கார்த்தி, " பொன்னியின் செல்வன் 2 ரிலீசாக போகிறது. ப்ரொமோஷன் வேலைகள் முடிய போகிறது. இந்த டீமுக்கு குட் பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என கூறிய போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

பேச முடியாமல் கண் கலங்கி, தடுமாறிய கார்த்தியை, மேடையில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த ஜெயம் ரவி ஓடி வந்து கட்டிப்பிடித்து தேற்றினார். ஜெயம் ரவியை தொடர்ந்து விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கார்த்தியை தேற்றினார்கள். பொன்னியின் செல்வன் டீமை பிரிய முடியாமல் எமோஷனலாகி கார்த்தி கண் கலங்கிய வீடியோவை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்