பிறந்தது கார்த்திகை மாதம் 2024 : 30 நாட்களும்.. இப்படி வழிபடுங்க... எல்லா நலனும் கிடைக்கும்!

Nov 16, 2024,07:16 PM IST
சென்னை : தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வருவது கார்த்திகை மாதம். ஆன்மிகத்தில் எட்டு என்ற எண்ணுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதே போல் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் வரும் தீபத்திருவிழாவும், சபரிமலை ஐயப்பன் விரதமும் தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் 30 நாட்களும் அளவில்லாத நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். 

எந்த தெய்வத்தை, எந்த கோரிக்கைக்காக வழிபட்டாலும் அதன் பலன் பல மடங்காக கிடைக்கக் கூடிய ஒரே மாதமும் கார்த்திகை மாதம் தான். 



கார்த்திகை மாத சிறப்புகளும், நலம் தரும் வழிபாடுகளும் :

* ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பார்கள். இதற்கு துலா ஸ்நானம் என்று பெயர். அப்படி ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் கூட காவிரியில் புனித நீராட முடியாதவர் கார்த்திகை முதல் நாள் ஒரே ஒரு நாள் நீராடினால் கூட ஒரு மாதம் கிடைக்க வேண்டிய புண்ணிய பலனும் ஒரே நாளில் கிடைத்து விடும்.     

* கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

* கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் (திங்கட்கிழமை) சிவ பெருமானுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். இதற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, காலை மற்றும் மாலையில் வீடு அல்லது கோவிலில் விளக்கேற்றினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானுக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* சிவ லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் நிரம்பிய வெண்கலம் அல்லது பித்தளை விளக்கை தானமாக அளித்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

--


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்