ஆத்தாடி.. "கருப்பன்" கழுத்தைப் பார்த்தீங்களா.. எத்தாத்தண்டி.. அசத்திய உரிமையாளர்!

Jan 17, 2024,06:36 PM IST

அலங்காநல்லூர்: தனது காளை கருப்பனுக்கு பிரமாண்ட தங்கச்சங்கிலி அணிவித்து அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து வந்த உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. ஜனவரி 15ம் தேதி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், 16ம் தேதியான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது.




இப்போட்டியை காண பல்வேறு இடங்களில் இருந்து பார்வையாளர்கள் அலங்காநல்லூருக்கு படையெடுத்து வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியால் அலங்காநல்லூர் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது முதல் பரிசாக காளைக்கும், காளையை அடக்கும் வீரருக்கும் 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. இவை தவிர்த்து எண்ணற்ற பரிசு பொருட்களும் பெற்றி பெறும் வீரருக்கும், காளைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள் கலந்து கொள்ள உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சப்பர் ஹோட்டல்  உரிமையாளர் போட்டியில் கலந்து கொள்ள வந்த தனது காளைக்கு தங்கச்சங்கலி அணிவித்து அழைத்து வந்தார். இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  காளையின் உரிமையாளர் கூறுகையில், நான் அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளர். கிட்டத்தட்ட  45 வருடங்களாக மாடு வளர்த்து வருகின்றேன்.


இந்த மாடு 12வது வருடமாக பாலமேட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது.  9 சைக்கிள், 3 தங்க காசு வாங்கியுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்த மாடு காரை பரிசாக வாங்கும் என்று அபார நம்பிக்கை உள்ளது. நான் 10 வயது முதல் மாடு வளர்த்து வருகிறேன். இந்த மாட்டிற்கு 19 லட்சத்தில் தங்கத்தில் ஆபரணம் செய்து வைத்துள்ளேன். வெள்ளியிலும் ஆபரணம் செய்து வைத்துள்ளேன். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.


போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை, பல்வேறு விதங்களாக அதன் உரிமையாளர்கள் அலங்காரம் செய்து அழைத்து வந்துள்ளனர். இப்போட்டி மொத்தம் 10 சுற்றுக்கலாக நடைபெற உள்ளது. காலை 7  மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காளையை போட்டிக்காக மட்டும் யாரும் வளர்ப்பதில்லை. சொந்தப் பிள்ளை போல, மகன் போல, அண்ணன் தம்பி போலத்தான் வளர்ப்பார்கள். அந்த வகையில் மகனுக்கு கழுத்தில் சங்கிலி செஞ்சு போடுவதில்லையா.. அதுபோல இந்த காளைக்கும் அஞ்சப்பர் உரிமையாளர் போட்டு அழகு பார்த்துள்ளார். 


சமீபத்திய செய்திகள்

news

தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

news

தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

news

பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)

news

பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!

news

சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!

news

Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?

news

தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?

news

பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்

news

ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்