விடாமல் வறுக்கும் வெயில்.. தமிழ்நாட்டில் 13 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பம்!

Apr 06, 2024,07:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் பல ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெளுத்தெடுத்தது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டிப் போய் விட்டது வெயில். குறிப்பாக ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை நிலவுகிறது. வெயில் கடுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனல் காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்கலில் தலா 106 டிகிரி வெயில் வெளுத்தெடுத்தது. திருச்சியில் 105, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், மதுரையில் 104 டிகிரி வெயில் பதிவானது. திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்தது.. தஞ்சாவூரில் 102 டிகிரி வெயில் பதிவானது.




பாளையங்கோட்டையில் 101 டிகிரி அளவுக்கு இன்று வெயில் பதிவானது. தலைநகர் சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இருப்பினும் வெப்பம் கடுமையாக இருந்ததால் பகல் நேரங்களில் அனலாக தகித்தது.


தமிழ்நாட்டில் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8ம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


10ம் தேதி தென் தமிழகத்தில் மழை


அதேசமயம், 10ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நல்ல செய்தியையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆகிய நாட்களிலும் கூட தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதேசமயம், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்