விடாமல் வறுக்கும் வெயில்.. தமிழ்நாட்டில் 13 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பம்!

Apr 06, 2024,07:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் பல ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெளுத்தெடுத்தது.


தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டிப் போய் விட்டது வெயில். குறிப்பாக ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை நிலவுகிறது. வெயில் கடுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனல் காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்கலில் தலா 106 டிகிரி வெயில் வெளுத்தெடுத்தது. திருச்சியில் 105, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், மதுரையில் 104 டிகிரி வெயில் பதிவானது. திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்தது.. தஞ்சாவூரில் 102 டிகிரி வெயில் பதிவானது.




பாளையங்கோட்டையில் 101 டிகிரி அளவுக்கு இன்று வெயில் பதிவானது. தலைநகர் சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இருப்பினும் வெப்பம் கடுமையாக இருந்ததால் பகல் நேரங்களில் அனலாக தகித்தது.


தமிழ்நாட்டில் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8ம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


10ம் தேதி தென் தமிழகத்தில் மழை


அதேசமயம், 10ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நல்ல செய்தியையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆகிய நாட்களிலும் கூட தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதேசமயம், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்