புற்று நோய்.. என் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க பெரும் சிரமப்பட்டேன்.. இளவரசி கேட் மிடில்டன் உருக்கம்

Mar 24, 2024,05:01 PM IST

லண்டன்:  எனக்கு வந்துள்ள புற்றுநோயை குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை எனது பிள்ளைகளுக்குக் கொடுக்க, அவர்களுக்கு இதைப் புரிய வைக்க எனக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால்தான் எனக்கு புற்றுநோய் வந்திருப்பதை வெளியில் சொல்ல இத்தனை தாமதம் ஆனதாக இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார்.


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.  கேட் மில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் ஆபரேஷன்  செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு முன்  புற்று நோய் இல்லை என அறிவித்த மருத்துவர்கள் ஆப்ரேஷனுக்குப் பிறகு  புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கேட் மிடில்டன் வெளியுலகில் காணப்படவில்லை. இதனால் பலரும் சந்தேகம் கிளப்பத் தொடங்கினர்.


இந்த நிலையில்தான் தனக்கு புற்று நோய் வந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் கேட் மிடில்டன். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் லண்டனில் எனக்கு வயிற்றில் மிகபெரிய ஆபரேஷன் செய்யப்பட்டது. அதில் எனக்கு புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக ஹீமோதெரபி கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்தனர். 




இதன் காரணமாக தற்போது ஆரம்பகட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தின் நலன் கருதியே எனக்கு புற்றுநோய் இருப்பதை வெளியில் கூறாமல்  இருந்தேன். இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து புற்றுநோய்க்கான சிகிச்சையை என்னால் தொடங்க தாமதமானது. மேலும் என் கணவரிடமும், என் குழந்தைகளிடமும் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை சமாதானப்படுத்திய பிறகு நான் இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறேன். 


என் பிள்ளைகளுக்கு இதை புரிய வைக்க முடியவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான் குணமடைவேன் என்று அவர்களை நம்ப வைக்க, நம்பிக்கை தர நான் நிறைய போராட வேண்டியிருந்தது. இதனால்தான் என்னால் இதை உடனடியாக அறிவிக்க முடியவில்லை.


இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். மனதளவிலும் உடலளவிலும் என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் கேட் மிடில்டன்.


விரைவில் குணமடையுங்கள் கேட் மிடில்டன்.. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்