புற்று நோய்.. என் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க பெரும் சிரமப்பட்டேன்.. இளவரசி கேட் மிடில்டன் உருக்கம்

Mar 24, 2024,05:01 PM IST

லண்டன்:  எனக்கு வந்துள்ள புற்றுநோயை குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை எனது பிள்ளைகளுக்குக் கொடுக்க, அவர்களுக்கு இதைப் புரிய வைக்க எனக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால்தான் எனக்கு புற்றுநோய் வந்திருப்பதை வெளியில் சொல்ல இத்தனை தாமதம் ஆனதாக இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார்.


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.  கேட் மில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் ஆபரேஷன்  செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு முன்  புற்று நோய் இல்லை என அறிவித்த மருத்துவர்கள் ஆப்ரேஷனுக்குப் பிறகு  புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கேட் மிடில்டன் வெளியுலகில் காணப்படவில்லை. இதனால் பலரும் சந்தேகம் கிளப்பத் தொடங்கினர்.


இந்த நிலையில்தான் தனக்கு புற்று நோய் வந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் கேட் மிடில்டன். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் லண்டனில் எனக்கு வயிற்றில் மிகபெரிய ஆபரேஷன் செய்யப்பட்டது. அதில் எனக்கு புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக ஹீமோதெரபி கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்தனர். 




இதன் காரணமாக தற்போது ஆரம்பகட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தின் நலன் கருதியே எனக்கு புற்றுநோய் இருப்பதை வெளியில் கூறாமல்  இருந்தேன். இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து புற்றுநோய்க்கான சிகிச்சையை என்னால் தொடங்க தாமதமானது. மேலும் என் கணவரிடமும், என் குழந்தைகளிடமும் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை சமாதானப்படுத்திய பிறகு நான் இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறேன். 


என் பிள்ளைகளுக்கு இதை புரிய வைக்க முடியவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான் குணமடைவேன் என்று அவர்களை நம்ப வைக்க, நம்பிக்கை தர நான் நிறைய போராட வேண்டியிருந்தது. இதனால்தான் என்னால் இதை உடனடியாக அறிவிக்க முடியவில்லை.


இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். மனதளவிலும் உடலளவிலும் என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் கேட் மிடில்டன்.


விரைவில் குணமடையுங்கள் கேட் மிடில்டன்.. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்