சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கென பிரத்யகமான கேசிபிடி ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், தனி கழிவறைகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் என பல்வேறு வசதிகள் உள்ளன.
இதுதவிர விரைவில் ரயில் நிலையம் வரவுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் உள்ளே வரைக்கும் செல்ல பாலம் அமைக்கப்படவுள்ளது. இப்படி பல்வேறு வசதிகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த நிலைியல், தற்போது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரத்தியக செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கேசிபிடி என்ற மொபைல் ஆப்பை இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த ஆப் மூலம் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழிகாட்டி வசதியை பெறலாம். சென்னையிலிருந்து பிற மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிற்கும் நடைமேடை,புறப்படும் நேரம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பெறலாம். அதேபோல் புறநகருக்குள் இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்கள், வழித்தடங்கள், நிறுத்தங்கள், தொடர்பான விவரங்களை அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து அட்டவணைகள், அங்குள்ள வசதிகள், கால்டாக்சி புக்கிங், போன்ற வசதிகளையும் கே சி பி டி ஆப் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் பேருந்துகள் குறித்து புகார்களை தெரிவிக்கலாம். அதே சமயத்தில் அவசர தேவைக்காக உதவி எண்களையும் அணுகலாம் . தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கே சி பி டி செயலியை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}