முதலீட்டாளர்கள் மாநாடு.. பினராயி விஜயன் அபுதாபி செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

May 05, 2023,09:42 AM IST

டெல்லி: அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்தாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி  மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

முதல்வர் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அபுதாபி செல்லவுள்ளது.

அபுதாபியில்  மே 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 12வது வருடாந்திர முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்கலந்து கொள்ளுமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு அபுதாபி வெளியுறவுத்துறை அமைச்சர் தனி பின் அகமது அல் ஜெயலூதி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார் முதல்வர் பினராயி விஜயன். 



இந்த கோரிக்கையைப் பரிசீலித்துப் பார்த்த மத்திய வெளியுறவுத்துறை பினராயியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. மாநில முதல்வர் நேரில் போய் கலந்து கொள்ளும் அளவுக்கு இது அதி முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு அல்ல. அதிகாரிகள் அளவிலே  கலந்து கொண்டால் போதுமானது  என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பினராயி விஜயனால் அபுதாபி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜீவ், முகம்மது ரியாஸ் ஆகியோர் அடங்கிய குழு நான்கு நாள் பயணத்திற்குத் திட்டமிட்டிருந்தது. அபுதாபி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதோடு, துபாயில் பொதுமக்கள் சந்திப்புக்கும் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் இவை ரத்தாகியுள்ளன.

இதற்கிடையே, மத்திய  அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் விடுத்துள்ள அறிக்கையில், கேரள முதல்வரின் அபுதாபி பயணம் தொடர்பாக மர்மம் நிலவுகிறது.  மத்திய அரசு ஏன் அனுமதி தரவில்லை என்பதை  விளக்க வேண்டும்.  அதேபோல கேரள அரசும், இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் தர வேண்டும்.

வழக்கமாக மத்தியஅரசு அடாவடி செய்தால்  வேகமாக பொங்கி எழுவார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால் தற்போது அவர் அமைதி காக்கிறார். இது ஏன் என்று விளக்க வேண்டும்.  ஒரு வேளை முதல்வரின் பயணம் நியாயமானதாக இருந்து, அதை மத்தியஅரசு மறுத்திருந்தால் அது கேரளமாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி அவமானமாக கருதப்பட வேண்டும்.  எனவே மத்திய அரசு உரியவிளக்கத்தை அளித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார் சுதாகரன்.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்