திருவனந்தபுரம்: இந்த கல்வியாண்டின் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப்புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம் என்று கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளி செல்லும் மாணவர்களின் பெரும் பிரச்சனையாக இருந்து வருவது புத்தக சுமை. இது மாணவர்களுக்கு மட்டும் அல்ல, பள்ளிக்கல்வித்துறையிலும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. சில மாணவர்கள் அதிகளவில் புத்தகங்களை சுமந்து செல்வதினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் புத்தகங்களை சுமந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாணவர்களின் இந்த பெரும் பிரச்சனைக்கு கேரள அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே மாதத்தின் 4 நாட்கள் பள்ளிக்கு பேக் எடுத்து வர வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. அத்துடன் வகுப்பு வாரியாக ஸ்கூல் பேக் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
2025-26ம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், கேரள அரசு தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களின் மனதை குளிரச் செய்துள்ளது. இது குறித்து கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு முதல் இரண்டு வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் எதுவும் கொண்டு வர தேவை இல்லை. வழக்கமான படங்களுக்கு பதிலாக அந்த முதல் இரண்டு வாரங்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகுப்புகள் நடைபெறும். போதைப்பழக்கம், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சட்டம், சமூக வலைதள பக்கங்களை எப்படி பயன்படுத்துவது என்றும், சுகாதாரம் குறித்து வகுப்புகள் எடுக்கப்படும் என்று கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு, சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வகுப்பு எடுக்க உள்ளனர். கேரளாவின் ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1 முதல் 10ம் வகுப்பு வரை முதல் இரண்டு வாரங்களுக்கு சமூக விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும் என்றும்,
11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அவர்களுக்கு ஒரு வாரம் இந்த சமூக விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு இந்த முயற்சி எடுத்துள்ளது. இந்த முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
More Rains On the way: மக்களே உஷார்.. தமிழ்நாட்டில் .. 2 நாட்களுக்கு.. மழை வெளுக்க போகுதாம்
அதிமுக பொதுச் செயலாளராக.. எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு.. எதிரான மனு தள்ளுபடி
Vijay gets ready for Tamil Nadu Tour: அரசியல் அதிரடிக்கு தயாராகும் விஜய்.. அடுத்த மூவ் இது தான்!
அடுத்தடுத்து வெளியேறும் கட்சிகள், உட்கட்சி குழப்பம்.. பலம் இழக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
40% வரி விதிப்புக்குள் வரும் Sin Goods.. காஸ்ட்லி கார்கள்.. சூப்பர் பைக்குகள்.. துப்பாக்கிகள்!
இந்தியா மீதான 50% வரியை எதிர்த்த உத்தரவு.. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் மேல்முறையீடு
விரைவில் நல்லது நடக்கும்.. அதிபர் டொனால்ட் டிரம்ப் எதை சொல்கிறார் தெரியுமா?
{{comments.comment}}