கேரளாவுக்கா போகப் போறீங்க.. வெயில் மண்டையைப் பொளக்குதாம்.. !

Apr 18, 2023,02:34 PM IST
திருவனந்தபுரம்: கேரளாவில் பகல் நேர வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எப்போதும் குளுகுளுவென காணப்படும் கேரளா தற்போது கசகசவென வியர்த்துக் கொட்டுகிறதாம்.

வழக்கமாக கோடைகாலத்தில் எல்லோரும் கேரளாவுக்குப் படையெடுப்பார்கள். காரணம், இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில்  எப்போதும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதே. ஆனால் இந்த முறை எல்லாம் தலைகீழாக உள்ளது. அங்கு வெயில் கொளுத்தி வருகிறதாம். கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. சிறு மழை கூட கேரளாவில் எங்குமே பதிவாகவில்லையாம். பகல் நேர வெப்பநிலை இப்போதைக்குக் குறையாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கடலுக்கும், நிலத்துக்கும்  இடையே பரவலான காற்று இல்லாத காரணத்தால் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக இருக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே வியர்த்துக் கொட்டுகிறதாம். வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியாமல் கேரள மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.  இதை விட கொடுமையாக, கேரளாவில் புற ஊதாக் கதிர்வீச்சும் வழக்கத்தை விட 12 யூனிட் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.   

வரும் நாட்களில் பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்குமாம்.  இந்த முறை கோடை மழையானது 38 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது. அதேசமயம், வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை பரவலாக அவ்வப்போது மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்