- பா. அகிலாண்டேஸ்வரி
கலகலவென குழந்தையின் சிரிப்பு ஓசை அழகு;
சலசலவென ஓடும் நதியின் ஓசை அழகு;
கண்ணாடி வளையல்களின் ஓசை அழகு ;
ஜல் ஜல் என சலங்கையின் ஓசை அழகு ;
காற்றில் ஆடும் மரம் செடிகளின் ஓசை அழகு ;
பறவைகள் கிரீச்சிடும் ஓசை அழகு ;
பசியின் போது சமையலில் தாளிக்கும் ஓசை அழகு;
நீர் வீழ்ச்சியின் ஓசை அழகு ;

மழையின் ஓசை அழகு ;
அதற்கு முன்னே வரும் இடியின் ஓசை அழகோ அழகு.
அலைகளின் ஓசை அழகு ;
அரிதாய் போன சில்லறை காசுகளின் ஓசை அழகு;
வண்டுகள் ரீங்காரம் ஓசை அழகு ;
புத்தகம் திருப்பும் ஓசை அழகோ அழகு.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகில்
இவை அனைத்தும் மாயமாய் மறைந்து போனதெங்கே!
எங்கெங்கும் கேட்கும் ஒரே ஓசை
கீ கீ என்ற டிஜிட்டல் கீ போர்டு குருவியின் ஓசைதானே!
(பா. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
{{comments.comment}}