- பா. அகிலாண்டேஸ்வரி
கலகலவென குழந்தையின் சிரிப்பு ஓசை அழகு;
சலசலவென ஓடும் நதியின் ஓசை அழகு;
கண்ணாடி வளையல்களின் ஓசை அழகு ;
ஜல் ஜல் என சலங்கையின் ஓசை அழகு ;
காற்றில் ஆடும் மரம் செடிகளின் ஓசை அழகு ;
பறவைகள் கிரீச்சிடும் ஓசை அழகு ;
பசியின் போது சமையலில் தாளிக்கும் ஓசை அழகு;
நீர் வீழ்ச்சியின் ஓசை அழகு ;

மழையின் ஓசை அழகு ;
அதற்கு முன்னே வரும் இடியின் ஓசை அழகோ அழகு.
அலைகளின் ஓசை அழகு ;
அரிதாய் போன சில்லறை காசுகளின் ஓசை அழகு;
வண்டுகள் ரீங்காரம் ஓசை அழகு ;
புத்தகம் திருப்பும் ஓசை அழகோ அழகு.
ஆனால் இந்த டிஜிட்டல் உலகில்
இவை அனைத்தும் மாயமாய் மறைந்து போனதெங்கே!
எங்கெங்கும் கேட்கும் ஒரே ஓசை
கீ கீ என்ற டிஜிட்டல் கீ போர்டு குருவியின் ஓசைதானே!
(பா. அகிலாண்டேஸ்வரி, இல்லத்தரசி, புதுமுகக் கவிஞர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்)
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}