- ம. அங்கயற்கண்ணி, அரூர்
என் மகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி தந்த புத்தகம் ஒற்றை சிறகு ஓவியா. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் மேதகு படைப்பு. குழந்தை இலக்கியம் தானே என்று அதை நான் படிக்கவே இல்லை, என் மகள் படித்து விட்டு குதுகலித்தாள்.
நான் பெரியதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன். விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற செய்தியும் அது ஒற்றை சிறகு ஓவியா நூலுக்கு என்று சில மாதங்களுக்கு முன்பு அறிந்து கொண்டேன். அதைக் கேட்டபோது ஒரு பக்கம் அளவில்லா ஆனந்தம், மறு பாக்கமோ ஆதங்கம், இரண்டு வருடமாக என்னை சுற்றி வந்த புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லையே என்றுதான்,
வீட்டிற்கு வந்ததும் என் குட்டி நூலகத்தில் இருந்து அதை தேடி கண்டெடுத்தேன், ஒளிரும் கண்களுடன் வாசிக்க தொடங்கினேன்.

ஐந்து நண்பர்கள், வாட்ச் மேன் தாத்தா, ஆண்டு விழா என சாதாரணமாய் ஆரம்பிக்கும் கதைதான், அடுத்து அடுத்து என நம்மை படிக்க தூண்டிக்கொண்டே இருக்கும் எழுத்து நடை, கதை சுவாரசியம், அதில் இயற்கையின் மீதான அக்கறை, மண்புழுக்கள், ரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகள், தண்ணீர் மாசுப்பாடு, விவசாயம் அழியும் கண்ணீர் கதை என குழந்தைகள் வழி பெரியோருக்கும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக நூல்.
எளிய நடை, விருவிறுப்பான கதை, கற்பனை விரிவு, என குழந்தைகள் விரும்பும் அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய ஆகசிறந்த படைப்பு, நீங்களும் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ஒற்றை சிறகு ஓவியா என்ற நூல், 2025ம் ஆண்டுக்கான சாகித் அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூலாகும். குழந்தைகளுக்கான நூல் என்றாலும் கூட பெரியவர்களும் கற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இதில் உள்ளன.
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}