ஒற்றை சிறகு ஓவியா.. நான் வாசித்த புத்தகம்!

Nov 05, 2025,03:41 PM IST

- ம. அங்கயற்கண்ணி,  அரூர்


என் மகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி தந்த புத்தகம் ஒற்றை சிறகு ஓவியா. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் மேதகு படைப்பு. குழந்தை இலக்கியம் தானே என்று அதை நான் படிக்கவே இல்லை, என் மகள் படித்து விட்டு குதுகலித்தாள்.


நான் பெரியதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன். விஷ்ணுபுரம் சரவணனுக்கு பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற செய்தியும் அது ஒற்றை சிறகு ஓவியா நூலுக்கு என்று சில மாதங்களுக்கு முன்பு அறிந்து கொண்டேன். அதைக் கேட்டபோது ஒரு பக்கம் அளவில்லா ஆனந்தம், மறு பாக்கமோ ஆதங்கம், இரண்டு வருடமாக என்னை சுற்றி வந்த புத்தகத்தை இன்னும் நான் வாசிக்கவில்லையே என்றுதான்,


வீட்டிற்கு வந்ததும் என் குட்டி நூலகத்தில் இருந்து அதை தேடி கண்டெடுத்தேன், ஒளிரும் கண்களுடன் வாசிக்க தொடங்கினேன்.




ஐந்து நண்பர்கள், வாட்ச் மேன் தாத்தா, ஆண்டு விழா  என சாதாரணமாய் ஆரம்பிக்கும் கதைதான், அடுத்து அடுத்து என நம்மை படிக்க தூண்டிக்கொண்டே இருக்கும் எழுத்து நடை, கதை சுவாரசியம், அதில் இயற்கையின்  மீதான அக்கறை, மண்புழுக்கள், ரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகள், தண்ணீர் மாசுப்பாடு, விவசாயம் அழியும் கண்ணீர் கதை என குழந்தைகள் வழி பெரியோருக்கும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக நூல்.


எளிய நடை, விருவிறுப்பான கதை, கற்பனை விரிவு, என குழந்தைகள்  விரும்பும் அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கிய ஆகசிறந்த படைப்பு, நீங்களும் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்


எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ஒற்றை சிறகு ஓவியா என்ற நூல், 2025ம் ஆண்டுக்கான சாகித் அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற நூலாகும். குழந்தைகளுக்கான நூல் என்றாலும் கூட பெரியவர்களும் கற்றுக் கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இதில் உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

news

மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)

news

இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!

news

அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்