- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
பத்துத் திங்கள்
பத்திரமாய் காத்து
முத்துச் சிரிப்புக்கு
முகம் ஏங்கும்
ரத்தப் பிசுக்கில்
குத்தம் குறையில்லா
குழவி வரும்
கலவி மூலம்
பெண்ணை தாயாக்கி
ஆணை தந்தையாக்கி
அந்தஸ்தை கொடுக்கும்
அன்புக் குழந்தை

கன்னக்குழி சிரிப்பும்
நாபிக்குழி சுழிப்பும்
கன்னமதக் களிறாய்
மதம் ஏற்றும்
மல்லாக்கப் படுத்தால்
நல்லாத்தான் இருக்கும்
குப்புறப் படுத்தால்
ஒப்புக்கு உரையேது?
தவழும் போதும்
தட்டு தடுமாறி
தளிர் நடை
பழகும் போதும்
பார்க்கும் பெற்றோர்
பாக்கியம் பெற்றோர்
கொழ கொழ குழந்தை வாக்கியம்
கலகல மழலைக் காவியம்
குழல் இனிது யாழ் இனிது 'என்று
பிஞ்சின் பேச்சு
வள்ளுவத்தைக் கூட வழுக்கச் செய்யும்
மழலைக் கட்டி நீ
சுகமான சுட்டி நீ
பெற்றோரின்
பேச்சு நீ
பாட்டி தாத்தாவின்
மூச்சு நீ
தேசத்தின்
தூண் நீ
அன்புப் பாலூட்டும்
ஆண் நீ
தாலாட்டும் அன்னையின்
வாலாட்டும்
வாரிசு நீ
அறம் ஊட்டும் அத்தனின்
உரம் கூட்டும் உயிர் நீ
பேதம் இல்லா
வேதம் நீ
உயிர் பொருளின்
ஓதம் நீ
பரம்பொருளின்
பாதம் நீ
உனது உச்சா
மந்திர நீர்
உனது மெளன உதை
உலகளந்தோன் சடாரி
தாவரத்தின் தாவரம் போல்
மானுடத்தின் மானுடம்
வெள்ளை மனத்து
கொள்ளை கொள்ளும்
குட்டிக் குழந்தை
ஆயர்பாடியில்
ஆடிக்கிடந்த
கண்ணனை நினைவூட்டும்
குழந்தையும் தெய்வமும்
சரிசமம் என்று
குவலயம் எழுதிக் காட்டும்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}