- எம்.கே.திருப்பதி, திருப்பூர்
பத்துத் திங்கள்
பத்திரமாய் காத்து
முத்துச் சிரிப்புக்கு
முகம் ஏங்கும்
ரத்தப் பிசுக்கில்
குத்தம் குறையில்லா
குழவி வரும்
கலவி மூலம்
பெண்ணை தாயாக்கி
ஆணை தந்தையாக்கி
அந்தஸ்தை கொடுக்கும்
அன்புக் குழந்தை

கன்னக்குழி சிரிப்பும்
நாபிக்குழி சுழிப்பும்
கன்னமதக் களிறாய்
மதம் ஏற்றும்
மல்லாக்கப் படுத்தால்
நல்லாத்தான் இருக்கும்
குப்புறப் படுத்தால்
ஒப்புக்கு உரையேது?
தவழும் போதும்
தட்டு தடுமாறி
தளிர் நடை
பழகும் போதும்
பார்க்கும் பெற்றோர்
பாக்கியம் பெற்றோர்
கொழ கொழ குழந்தை வாக்கியம்
கலகல மழலைக் காவியம்
குழல் இனிது யாழ் இனிது 'என்று
பிஞ்சின் பேச்சு
வள்ளுவத்தைக் கூட வழுக்கச் செய்யும்
மழலைக் கட்டி நீ
சுகமான சுட்டி நீ
பெற்றோரின்
பேச்சு நீ
பாட்டி தாத்தாவின்
மூச்சு நீ
தேசத்தின்
தூண் நீ
அன்புப் பாலூட்டும்
ஆண் நீ
தாலாட்டும் அன்னையின்
வாலாட்டும்
வாரிசு நீ
அறம் ஊட்டும் அத்தனின்
உரம் கூட்டும் உயிர் நீ
பேதம் இல்லா
வேதம் நீ
உயிர் பொருளின்
ஓதம் நீ
பரம்பொருளின்
பாதம் நீ
உனது உச்சா
மந்திர நீர்
உனது மெளன உதை
உலகளந்தோன் சடாரி
தாவரத்தின் தாவரம் போல்
மானுடத்தின் மானுடம்
வெள்ளை மனத்து
கொள்ளை கொள்ளும்
குட்டிக் குழந்தை
ஆயர்பாடியில்
ஆடிக்கிடந்த
கண்ணனை நினைவூட்டும்
குழந்தையும் தெய்வமும்
சரிசமம் என்று
குவலயம் எழுதிக் காட்டும்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
குறுங்கதை.. ரகசியம் பலித்ததோ?
இணைய வகுப்பு
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
நவசமாஜ் மகளிர் மேடையின் 3ம் ஆண்டு தொடக்க விழா.. சாதனை மாணவிகளுக்கு கெளரவம்
திருப்பள்ளி எழுக!
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
மிளகுத்தக்காளி என்ற மணத்தக்காளி
Short Story: தபால் பெட்டி
{{comments.comment}}